ஜனநாயக பண்டிகையை சிறப்பியுங்கள்.. - ஓட்டு போட மக்களை அழைக்கும் பிரதமர் மோடி!
டெல்லி: ஜனநாயகத்தின் பண்டிகையை சிறப்பிக்கவேண்டும் என இளைஞர்களிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. உ.பி.யில் கடந்த 10-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், ஐந்து மாநில மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமர் மோடி
கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல் உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தின் பண்டிகையை சிறப்பிக்கவேண்டும். குறிப்பாக இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

தேர்தல்
பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் வரும் மார்ச் 10ம் தேதி முடிவடைகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 10ம் தேதி நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் ஏற்கெனவே முதற்கட்ட தேர்தல் முடிவடைந்திருக்கிறது. இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது.

பாஜக
இந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், மீண்டும் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக பிரசாரம் செய்து வருகிறது. உத்தரகாண்ட், கோவா, உத்தரப்பிரதேசம், மணிப்பூரில் பாஜக அரசு ஆட்சியில் இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தை சேர்த்து அனைத்து மாநிலத்திலும் வெற்றி பெற பாஜக தீவிர பிரசாரத்தை மேற்கொள்கிறது.

ஐந்து மாநிலம்
சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் காலை 9 மணி நிலவரப்படி 9.45%; கோவா மாநிலத்தில் 11.04%; உத்தரகாண்ட் மாநிலத்தில் 5.15% வாக்குகள் பதிவாகி உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அனைத்துக் கட்சிகளும் இந்தத் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில்
ஈடுபட்டு வருகின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications