ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை
டெல்லி: தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி மற்றும் அஸாம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கான அட்டவணை அறிவிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இதன்படி ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் வாக்குப்பதிவு நடக்கலாம் என்றும், மே மாதம் வாக்கு எண்ணிக்கை இருக்கலாம் என்று அதிகாரிகள் தகவல் கூறி இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியின் பதவிக்காலம் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதேபோல் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் பதவியின் பதவிக்காலம் மே 7ஆம் தேதியுடனும், கேரளாவில் சிபிஎம் ஆட்சிக்காலம் மே 23ஆம் தேதியுடனும், புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக ஆட்சியின் ஜூன் 15ஆம் தேதியுடனும், அஸாமில் மே 20ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதனால் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட 5 மாநில சட்டசபைத் தேர்தலையும் ஒன்றாக நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. 5 மாநிலங்களில் மொத்தமாக உள்ள 824 சட்டசபைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தேர்தல் ஆணையர்கள் குழு ஒவ்வொரு மாநிலமாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
அதேபோல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்து பேசி வருகிறது. இதன் காரணமாக 5 மாநில தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே மார்ச் 15ஆம் தேதி 5 மாநில தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவிக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 5 மாநில தேர்தல் தேதி அட்டவணை அறிவிப்பது தொடர்பாக டெல்லி இன்று ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் தேர்தல் நடக்கலாம் என்று தெரிகிறது. அதிகாரிகள் தரப்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கலாம் என்று கூறுகின்றனர்.
அதேபோல் மேற்கு வங்கம் சட்டசபைத் தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்த பின், மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி தீவிரப்படுத்திவிட்ட சூழலில், தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
-
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
வேட்பு மனுக்களை என்னென்ன காரணங்களுக்கு நிராகரிக்க கூடாது? தேர்தல் ஆணையம் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்!












Click it and Unblock the Notifications