திருப்பூர் தப்பியது! இந்தியா மீதான வரியை குறைத்த டிரம்ப்! எந்த துறைகள் பலன் பெறும்? விவரம்
டெல்லி: இந்தியா மீது அமெரிக்கா 25% அளவுக்கு பரஸ்பர வரியை விதித்திருந்தது. வரி குறைப்பு தொடர்பாகவும், அமெரிக்காவுடனான வர்த்தகம் தொடர்பாகவும் இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்திருந்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது. இதனால் இந்தியா மீதான பரஸ்பர வரியானது 25%லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் பல துறைகள் பலனடையும் என்று சொல்லப்படுகிறது.
இந்த வர்த்தக ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது இந்தியாவுக்கு உடனடி வரிச் சலுகையை உறுதிப்படுத்துகிறது.

வரிச்சுமை குறைந்ததால், அமெரிக்கச் சந்தையில் கணிசமான வர்த்தகம் கொண்ட நிறுவனங்கள் தங்கள் லாப வரம்புகளில் நிவாரணம், மேம்பட்ட போட்டித்திறன் மற்றும் சிறந்த ஆர்டர் திட்டமிடல் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். இந்திய ஏற்றுமதியாளர்களிடையே ஜவுளி, கடல் உணவு, வாகன உதிரி பாகங்கள், ரசாயனங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நுகர்வோர் நிறுவனங்கள் இதில் முக்கியப் பயனாளிகளாக இருக்கும் எனத் தெரிகிறது.
குறிப்பாக திருப்பூரின் ஜவுளி உற்பத்தி மீண்டும் புத்துயிர் பெரும் என சொல்லப்படுகிறது. இந்திய பின்னலாடைகளுக்கு அமெரிக்கா ஏற்கனவே சுமார் 16% வழக்கமான வரி விதித்து வந்தது. அதனுடன் 2025-ல் அறிவிக்கப்பட்ட கூடுதல் அபராத வரிகளும் சேர்ந்தபோது, மொத்த வரிச்சுமை 65% வரை உயர்ந்தது.
வரி அதிகரிப்பால் இந்திய ஆடைகளின் விலை அமெரிக்கச் சந்தையில் மிக அதிகமாக உயர்ந்தது. இதனால் வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளுடன் போட்டியிட முடியாமல் திருப்பூர் நிறுவனங்கள் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆர்டர்களை இழந்தன. அதிக வரி காரணமாக ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் துறைமுகங்களிலும், கிடங்குகளிலும் தேக்கமடைந்தன. பல சிறு மற்றும் குறு நிறுவனங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட முடியாமல் உற்பத்தியை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க ஏற்றுமதியாளர்கள் தங்களின் லாபத்தை முழுமையாகத் தியாகம் செய்து 20% முதல் 25% வரை தள்ளுபடி வழங்க வேண்டியிருந்தது. இந்நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா தனது வரியை 18% ஆகக் குறைத்துள்ளதால், திருப்பூர் நிறுவனங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.
65% லிருந்து 18% ஆக வரி குறைந்திருப்பது, அமெரிக்கச் சந்தையில் இந்திய ஆடைகளின் விலையை உடனடியாகக் குறைக்கும். இது மீண்டும் பழைய ஆர்டர்கள் இந்தியாவுக்குத் திரும்ப வழிவகுக்கும். வரிக் குறைப்பால் நிறுவனங்களின் லாப வரம்பு உயரும். இது கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட உதவும்.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா?












Click it and Unblock the Notifications