ஈரான் -அமெரிக்கா இடையே போர் பதற்றம்.. பிரதமர் மோடி தலைமையில இன்று காலை அமைச்சரவை கூட்டம்
Recommended Video
டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் குடிரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர்கள் தங்கள் மீது பல்கலைக்கழக ஹாஸ்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வன்முறை கும்பலை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளில் போராட்டம் நடக்கிறது.
இன்னொரு பக்கம் இன்று நாள் முழுவதும் வங்கிகள் மற்றும் கடைகளை அடைத்து போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
உலக அளவில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் அபாயம் எழுந்துள்ளது.இந்த சூழ்நிலையில் தான் இன்று காலை பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட அமைச்சரவை ஆலோசனை நடத்த உள்ளது. என்ன விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பார்கள் என்பது ஆலோசனைக்கு பின்தெரியவரும். முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.