என்னது ஒரு லட்சமா? சத்தியமங்கலத்தில் ‘ஷாக்’ கொடுத்த கரண்ட் பில்! அப்பறம் நடந்தது தான் ட்விஸ்டே!
ஈரோடு : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கூலி தொழிலாளியின் வீட்டிற்கு மின் கட்டணம் ரூ.94985 என குறுஞ்செய்தி வந்ததால் கூலித் தொழிலாளி அதிர்ச்சி அடைந்த நிலையில், அதன் பின்னர் அதிகாரிகள் கூறிய விளக்கம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது.
தமிழகத்தில் சுமார் 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயுத தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன, 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும், 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக மின் கட்டணம் மாற்றம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம்
ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவிக்கும் நிலையில் மின்கட்டண உயர்வுக்கு அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அடுத்த மாதம் முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் மின் கட்டண கணக்கீட்டு முறைகளில் குளறுபடி நடப்பதாகவும் கூறப்படுகிறது.

ரூ.94985 கட்டணம்
இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே கூலி தொழிலாளியின் வீட்டிற்கு மின் கட்டணம் ரூ.94985 என குறுஞ்செய்தி வந்ததால் கூலித் தொழிலாளி அதிர்ச்சி அடைந்துள்ளார். ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்குத்திபுரம் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவண்ணா. கூலி தொழிலாளியான இவர் மனைவி காளி மற்றும் தனது குழந்தைகளுடன் கிராமத்தில் உள்ள சிறிய வீட்டில் வசித்து வருகிறார்.

இலவச பயன்பாடு
வீட்டிற்கு தனது மனைவி காளி பெயரில் மின் இணைப்பு பெற்றுள்ளார். இவரது வீட்டிற்கு இரண்டு மாதத்திற்குள் முறை நூறு யூனிட் வரை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார். இலவச பயன்பாடு என்பதால் இதுவரையிலும் மின் கட்டணம் செலுத்தவில்லை. இந்த நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு மின் கட்டணம் ரூ.94985 செலுத்துமாறு குறுஞ்செய்தி வந்தது.

அதிகாரிகள் விளக்கம்
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரேவண்ணா உடனடியாக தாளவாடி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டார். மின்வாரிய அதிகாரிகள் மின்சார மீட்டர் கணக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் தவறாக குறுஞ்செய்தி வந்துள்ளதாக அவரிடம் தெரிவித்ததையடுத்து ரேவண்ணா நிம்மதி அடைந்தார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications