காந்தி நகர்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டுப்பதிவு செய்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
14,382 வாக்குச்சாவடிகளில் இந்த தேர்தல் நடக்க உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் அங்கு டிசம்பர் 5ம் தேதி நடக்க உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ம் தேதி வெளியாகும். இன்று தொடங்கியுள்ள தேர்தலில் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 39 கட்சிகள் சார்பாக 339 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். மற்றவர்கள் சுயேச்சை வேட்பாளர்கள். 2,39,76,760 பேர் முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதில் 5.74 லட்சம் பேர் 18-19 வயது கொண்ட முதல் தலைமுறை வாக்காளர்கள்.
குஜராத்தில் கடந்த 27 வருடமாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. குஜராத் பாஜகவின் கோட்டையாக உள்ளது. 1995ல் இருந்து அங்கு பாஜக ஆட்சிதான் உள்ளது. இந்த நிலையில்தான் இந்த முறை பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே கடுமையான மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த முறை பாஜக ஆட்சி முடிவிற்கு வருமா.. அல்லது காவி கொடி மீண்டும் ஏற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் குஜராத் சட்டசபை தேர்தல் அதிக கவனம் பெற்றுள்ளது.
Dec 01, 2022, 7:06 pm IST
குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த பிரமாண்ட பேரணியின் போது, ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக தனது கான்வாய்யை நிறுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.
#WATCH | Prime Minister Narendra Modi stopped his convoy to give way to an ambulance during his massive roadshow in Gujarat's Ahmedabad.
காந்தி நகர்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
Dec 01, 2022, 5:51 pm IST
குஜராத்தில் 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடந்த முதல் கட்ட வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
Dec 01, 2022, 5:46 pm IST
குஜராத்தில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு நடந்து வரும் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 56.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
Dec 01, 2022, 5:37 pm IST
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 50 கிமீ பேரணியை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் மோடிக்கு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.. அவர்களுக்கு குஜராத் மக்கள் நிச்சயம் வாக்குகள் மூலம் பதிலளிப்பார்கள் - மத்திய அமைச்சர் அமித் ஷா
Dec 01, 2022, 5:04 pm IST
குஜராத் தேர்தலில் பாஜகவுக்கே சாதகமான நிலை உள்ளது. பிரதமர் மோடி மீது மக்களுக்கு அளப்பறிய அன்பு உள்ளது. முதல்வர் பூபேந்திர படேலும் மாநில வளர்ச்சிக்கான பணிகளை செய்து இருக்கிறார். இன்றைய வாக்குப்பதிவுகளில் சாதகமான முடிவுகள் இருக்கும் என்பதை நாங்கள் காண முடிந்தது என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
Jaipur | Gujarat election is going in the favour of BJP. There is immense love for PM Modi in the state. CM Bhupendra Patel has done the work of development in Gujarat. We have seen positive results in today's polling: BJP national president JP Nadda on Gujarat polls pic.twitter.com/tIExaDpyxe
குஜராத்தில் தேர்தல் ஒருபக்கம் நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் மறுபுறம் நடைபெற்று வருகிறது. பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா அகமதாபாத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அமித்ஷா, காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட்டு வருவதாக சாடியுள்ளார்.
Dec 01, 2022, 4:25 pm IST
அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தாக்கியதாக நவ்சரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பியூஷ் பாய் படேல் இன்று குற்றம் சாட்டியிருந்தார். ஜாரி கிராமத்தில் வைத்து இன்று அதிகாலை தாக்குதல் நடைபெற்றதாக அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று நவ்சரி பகுதியில் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், 4-5 கார்களும் சேதப்படுதப்பட்டதாக அவர் புகார் கூறியிருந்தார். இதுதொடர்பாகவும் விசாரணை நடப்பதாக நவ்சரி பகுதியில் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Gujarat | Navsari BJP candidate Piyush Bhai Patel has alleged that he was attacked by unknown persons in Jhari village in the early morning hours today; 4-5 vehicles were also damaged in the incident. Investigation underway: SP Navsari pic.twitter.com/WTIAaV1fli
குஜராத்தில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு நடந்து வரும் தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 48.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தாபி மாவட்டத்தில் 63.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
Dec 01, 2022, 3:33 pm IST
தேர்தல் வெளிப்படைத்தன்மையுடன் நடப்பதை உறுதி செய்யும் வகையில் 13,065 வாக்குச்சாவடிகள் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நடந்து முடியும் வரை தொடர்ந்து இந்த வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்பட்டுகொண்டே இருக்கும் என்றும்.. முறைகேடுகள் இன்றி வெளிப்படைதன்மையுடன் நடப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் குஜராத் மநில தேர்தல் ஆணையர் பி பாரதி தெரிவித்தார்.
Dec 01, 2022, 3:06 pm IST
பாஜக ஆட்சியால் குஜராத்தில் மக்கள் சலிப்படைந்துவிட்டதாக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் சகோதரி நைனா ஜடேஜா விமர்சித்துள்ளார்.
Dec 01, 2022, 2:36 pm IST
வாக்காளர்கள் சரியான முடிவை எடுத்து ஆம் ஆத்மிக்கு வாக்களிக்குமாறு முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி எம்.பியுமான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஹர்பஜன் சிங் கூறுகையில், வாக்காளர்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றும் ஆம் ஆத்மிக்கு தங்கள் வாக்கினை செலுத்த வேண்டும் எனவும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
Dec 01, 2022, 2:08 pm IST
குஜராத்தில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது
Dec 01, 2022, 2:07 pm IST
மதியம் 1 மணி நிலவரப்படி 34.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது
Dec 01, 2022, 1:51 pm IST
ராஜ்கோட் மாவட்டத்தில் நண்பகல் 12 மணி வரை 26 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அருண் மகேஷ் தெரிவித்தார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: ராஜ்கோட்டில் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்து வருகின்றனர். ராஜ்கோட் மாவட்டத்தில் நண்பகல் 12 மணி வரை 26 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுவரை விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணித்து வருகிறோம்” என்றார்.
Dec 01, 2022, 1:24 pm IST
குஜராத்தின் ஆரவல்லி பகுதியில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 2-ஆம் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது யோகி ஆதித்யநாத் கூறுகையில், "இன்று மிகவும் முக்கியமான நாளாகும். குஜராத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைவராக பிரதமர் ஆகியிருக்கும் பெருமையான நிகழ்வும் இன்று நடைபெற்றுள்ளது. பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தையும் அவரது புகழும் உலக அளவில் அதிகரித்து இருப்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது" என்றார்.
Today is an imp day. Voting is underway for first phase of polls today & today itself Gujarat's gaurav (pride) PM Modi has become Head of G20 countries. It shows PM Modi's leadership & India's increasing reputation at the global level: UP CM Yogi Adityanath, in Aravalli, Gujarat pic.twitter.com/kNT1sV3bnJ
கலோல் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: "நான் குஜராத் மண்ணின் மைந்தன். மோடியை யார் அதிகம் அவதூறு செய்கிறார்கள் என்ற போட்டியே காங்கிரஸ் கட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியினர் எவ்வளவு சேற்றை வீசுகிறார்களோ அவ்வளவு தாமரை அதிகமாக பூக்கும்” என்றார்
Dec 01, 2022, 12:44 pm IST
குஜராத்தின் அகமதாபாத் நகரில் பாஜகவின் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா, வாகனங்களில் பேரணியாக சென்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, குஜராத்தில் முதல்வராக மோடி இருந்த போது, பல்வேறு பிரச்சினைகளில் தீர்வு காணப்பட்டதாகவும், 24 மணி நேரமும் மின்சார வசதி மக்களுக்கு கிடைத்ததாகவும் குறிப்பிட்டார்.
#GujaratAssemblyPolls | Ahmedabad: Under the tenure of CM Modi, various problems were solved in Gujarat. Water problem was solved, and check dams were built. Electricity is being supplied for 24 hours. Enrollment and dropout issue was solved: Union Home minister Amit Shah to ANI pic.twitter.com/9HhcL3Vnqf
குஜராத்தில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பல மூத்த குடிமக்களும் ஆர்வத்துடன் வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், உமர்கம் பகுதியில் 100-வயதான மூதாட்டியான கமுபென் படேல் அப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
Dec 01, 2022, 12:15 pm IST
குஜராத்தில் 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கலோல் சட்டமன்ற தொகுதியில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். காந்திநகர் மாவட்டம் கலோல் நகரில் நடைபெற்று வரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்த தொகுதியில் வரும் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
Dec 01, 2022, 11:45 am IST
குஜராத்தின் சூரத் தொகுதியில் மத்திய அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பிறகு பேட்டி அளித்த அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ், "குஜராத்தில் இரட்டை என்ஜின் கொண்ட அரசாங்கத்திற்காக மக்கள் வாக்களிப்பார்கள். அனைத்து சமுதாய மக்களும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள். குஜராத்தில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும்" என்றார்.
She says "People are voting for double-engine govt in the state. People from every community have been voting and we'll be forming govt with an absolute majority." pic.twitter.com/0GPXo0I84F
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா குஜராத்தின் பாவ் நகரில் உள்ள ஹனோல் கிராமத்தில் தனது வாக்கினை பதிவு செய்கிறார். முன்னதாக தனது கிராம மக்களுடன் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடினார்.
குஜராத்தில் 89 தொகுதிகளுக்கு விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், ராஜ்கோட்டில் உள்ள வாக்குச்சாவடியில், முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களான மந்ததாசிங் ஜடேஜ் தாகூர் சாஹேப், காதம்பரி தேவி ஆகியோர் வாக்களித்தனர். வாக்களிப்பதற்காக பழமையான காரில் அவர்கள் வருகை தந்தது அங்கு கவனத்தை ஈர்த்தது.
Gujarat | Mandhatasinh Jadej Thakor Saheb and Kadambari Devi - members of the erstwhile royal family in Rajkot cast their votes today in the first phase of #GujaratElection2022
கடர்கம் தொகுதியில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருவதாகவும் இதற்கு பாஜக ரவுடிகளே காரணம் என்று ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் தலைவர் கோபால் இடாலியா குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் அதிகாரிகளுக்கு பாஜகவினர் அழுத்தம் கொடுப்பதாகவும் இடாலியா குற்றம் சாட்டியுள்ளார்.
कतारगाम AC मे जानबूझ कर वोटिंग स्लो कराया जा रहा है। @ECISVEEP इस तरीके से भाजपाई गुंडों के दबाव के ही काम करना है तो फिर चुनाव ही क्यो करवाते हो?
पुरे प्रदेश मे ओसत 3.5% मतदान हुआ है लेकिन कतारगाम मे सिर्फ 1.41 ही हो पाया है। एक छोटे से बच्चे को हराने के लिए इतना मत गीरो।
ஜாம்நகர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின் ஜடேஜா கூறுகையில், மக்கள் பெருமளவில் வந்து வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என்றார். இவரது மனைவியும் ஜாம்நகர் தொகுதி பாஜக வேட்பாளருமான ரிவபா ஜடேஜா ராஜ்கோட்டில் தனது வாக்கினை இன்று பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
#GujaratElections2022 | Cricketer Ravindra Jadeja cast his vote at a polling station in Jamnagar. His wife and BJP candidate Rivaba Jadeja voted in Rajkot earlier today.
குஜராத்தில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மேஹ்சனா தொகுதியில் அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் சாலை மார்க்கமாக வாகனத்தில் ரோட்ஷோ சென்றார். மேஹ்சனா தொகுதியில் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி அங்கு பிரசாரத்தில் முதல்வர் பூபேந்திர படேல் ஈடுபட்டார். பாஜகவினர் புடைசூழ வாகனத்தில் சென்றபடி கட்சி தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
#GujaratAssemblyPolls | Gujarat CM Bhupendra Patel holds a roadshow in Mehsana. Mehsana will be voting in the second phase of the elections to be held on December 5. pic.twitter.com/enNamFZhC0
பாஜக சார்பாக ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். ரிவாபா ஜடேஜாவிற்கு எதிராக ரவீந்திர ஜடேஜாவின் சகோதரி நைனா ஜடேஜா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அதாவது காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நைனா ஜடேஜா ஆதரித்து பிரசாரம் செய்தார். வாக்குப்பதிவு நாளான இன்று நைனா ஜடேஜா கூறுகையில், "இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. ஜாம்நகரில் உள்ள பல குடும்பங்களில் இதுபோன்று வேறு வேறு கட்சிகளில் பலர் இருக்கின்றனர். உங்கள் சித்தாந்தத்தில் திருப்தி அடைந்து கொண்டு 100 சதவீதம் உழைப்பை கொடுக்க வேண்டும். சிறந்த ஒன்று வெற்றி பெறும" என்றார்.
#GujaratElections2022 | Not the first time it's happening. Several families in Jamnagar have members working for different parties. Be satisfied with your ideology, give your 100%&the better one will win: Naina Jadeja, sister-in-law of BJP's Rivaba Jadeja, who campaigned for Cong pic.twitter.com/5ldxmCT2mz
இரண்டாம் கட்ட தேர்தல் அங்கு டிசம்பர் 5ம் தேதி நடக்க உள்ளது
8:36 PM, 30 Nov
14,382 வாக்குச்சாவடிகளில் இந்த தேர்தல் நடக்க உள்ளது
8:36 PM, 30 Nov
182 தொகுதிகளில் மொத்தம் 89 தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடக்க உள்ளது
8:36 PM, 30 Nov
காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது
8:36 PM, 30 Nov
குஜராத் மாநில சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்க உள்ளது
6:43 AM, 1 Dec
குஜராத்தில் முதல் கட்டமாக 89- தொகுதிகளுக்கு இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. வாக்குப்பதிவு தொடங்க இன்னும் இரண்டு மணி நேரம் கூட இல்லாததால், வாக்குப்பதிவை தொடங்குவதற்காக ஏற்பாடுகள் வாக்குச்சாவடி மையங்களில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
6:58 AM, 1 Dec
குஜராத் ஜாம்நகர் வடக்குத்தொகுதியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: "இன்று மிக முக்கியமான நாள். பாஜக வேட்பாளர்களின் அனைவரின் உழைப்புக்கும் இன்று பலன் கிடைக்கப் போகிறது. வாக்காளர்கள் அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
Gujarat | Today is a very important day. The hard work of all BJP candidates is going to pay off. I request people to vote as much as possible: Rivaba Jadeja, BJP's Jamnagar North candidate #GujaratElectionspic.twitter.com/Ujr1T2TLyq
குஜராத்தின் மினி ஆப்பிரிக்க கிராமம் என்று அழைக்கப்படும் ஜாம்பூர் பகுதியில் பிரத்யேகமாக பழங்குடியின மக்களுக்காக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக அமைக்கப்பட்டு இருக்கும் இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்ததை அப்பகுதி மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி நேற்று இரவு கொண்டாடினர்.
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் சோதனை அடிப்படையில் நடைபெறும் மாதிரி வாக்குப்பதிவு (mock poll) நடைபெற்றது. அந்த வகையில் பரூச் நகரில் உள்ள பிரமன் பள்ளியில் அமைக்கப்பட்டு இருக்கும் வாக்குச்சாவடியில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
Gujarat | Election officials conducted a mock poll at polling booths numbers 175 to 178, Piraman school in Bharuch
குஜராத்தில் தேர்தல் தொடங்க இன்னும் சில நிமிடங்களே உள்ளது. இதனால், தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பு அடைந்துள்ளது. இதனிடையே, நவ்சரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பியூஸ் படேல் மீது தாக்குதல் நடைபெற்றதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தாக்கியதாக பியூஸ் படேல் குற்றம் சாட்டியுள்ளார்.
7:45 AM, 1 Dec
ஜனநாயக திருவிழாவை குஜராத் இன்று கொண்டாடுகிறது. இந்த ஜனநாயக திருவிழாவில் வாக்காளர்கள் அதிக அளவில் பங்கேற்று புதிய சாதனை படைக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குஜராத் வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
— Election Commission of India #SVEEP (@ECISVEEP) December 1, 2022
7:52 AM, 1 Dec
குஜராத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. குஜராத் மாநில தேர்தலில் அதிக வாக்காளர்கள் வாக்களித்து புதிய சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது ட்விட் பதிவில் பிரதமர் மோடி கூறுகையில், ''முதல் முறை வாக்காளர்கள் தங்களுடைய வாக்குரிமையை செயல்படுத்த வேண்டும்" என்றும் பதிவிட்டுள்ளார்.
Today is the first phase of the Gujarat elections. I call upon all those voting today, particularly first time voters to exercise their franchise in record numbers.
குஜராத்தில் முதல் கட்டமாக இன்று 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு சரியாக காலை 8 மணிக்கு தொடங்கியது. ஓட்டுப்பதிவு தொடங்கிய காலை 8 மணி முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
8:12 AM, 1 Dec
குஜராத்தில் தேர்தல் அலுவலர்களாக பெண்கள் மட்டுமே பணியாற்றும் வகையில் 1274 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 4.77 லட்சம் பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 3.3 லட்சம் இளம் வாக்காளர்கள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் சீர்திருத்தங்களால் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டனர் - தலைமை தேர்தல் ஆணையர்
Similarly, only women election staff will be present at 1274 booths. 4.77 lakh first-time voters would exercise their franchise in these elections & of these,over 3.3 lakh young voters have been added because of the recent electoral reforms: CEC Rajiv Kumar#GujaratAssemblyPollspic.twitter.com/waifrITiF0
குஜராத் சூரத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் குஜராத் அமைச்சர் புர்னேஷ் மோடி இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். தனது குடும்பத்தினருடன் வந்து முதல் ஆளாக வந்து வாக்கினை செலுத்தினார்.
#GujaratAssemblyPolls | Gujarat cabinet minister Purnesh Modi goes to the polling booth in Surat for casting his vote.
மத்திய பிரதேச மாநில ஆளுநர் மங்குபாய் படேல் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். குஜராத் தேர்தலை முன்னிட்டு இன்று நவ்சரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்து ஆளுநர் மங்குபாய் படேல் தனது வாக்கினை பதிவு செய்தார். ஆளுநர் வருகையால் வாக்குச்சாவடியில் சற்று கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "ஒரே குடும்பத்தில் வெவ்வேறு சித்தாந்தங்கள் கொண்டவர்கள் இருக்கலாம். ஜாம்நகர் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஒட்டு மொத்த வளர்ச்சி மீதுதான் நாங்கள் கவனம் செலுத்துவோம். இந்த முறையும் பாஜக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்" என்றார்.
ஜனநாயகத்தை பேணி காக்க வாக்களிப்பது அவசியம். வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். 7-வது முறையாக பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பிரதமர் மோடி மீது மக்களுக்கு மதிப்பும் அன்பும் உள்ளது. எனவே, மக்கள் வேறு யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள்- குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி
I appeal to people to cast their votes. Voting is necessary to safeguard democracy. I am confident that BJP is going to form the Govt in Gujarat for the seventh time. People have love & respect for PM Modi, they won't go anywhere else: Ex-Guj CM Vijay Rupani#GujaratElectionspic.twitter.com/yTIBhrHjM2
குஜராத் முதல் கட்ட தேர்தலை முன்னிட்டு, அம்மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி தனது மனைவி அஞ்சலி ரூபானியுடன் ராஜ்கோட்டில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.
குஜராத்தில் இன்று 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அகமதாபாத்தில் மாலை பிரதமர் மோடி சாலை மார்கமாக சென்று மக்களை சந்திக்கிறார். மாலை தொடங்கும் இந்த பயணம் இரவு 9.45 மணியளவில் நிறைவு பெறுகிறது. இதில் 50 கி.மீ தொலைவு வரை பிரதமர் சாலை மார்க்கமாகவே பயணிக்கிறார். மக்களை சந்திப்பதற்காக இவ்வளவு தொலைவு சாலை மார்க்கமாக பிரதமர் பயணிப்பது இதுவே முதல்முறையாகும்.
Sharing glimpses of PM Shri @narendramodi Ji’s road show in Kashi.
குஜராத்தில் உள்ள 89 தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 8 மணியளவில் தொடங்கியுள்ளது
9:07 AM, 1 Dec
மக்களை சந்திப்பதற்காக இவ்வளவு தொலைவு சாலை மார்க்கமாக பிரதமர் பயணிப்பது இதுவே முதல்முறையாகும்
9:08 AM, 1 Dec
இதில் 50 கி.மீ தொலைவு வரை பிரதமர் நரேந்திர மோடி சாலை மார்க்கமாகவே பயணிக்கிறார்
9:08 AM, 1 Dec
மாலை தொடங்கும் இந்த பயணம் இரவு 9.45 மணியளவில் நிறைவு பெறுகிறது
9:08 AM, 1 Dec
அகமதாபாத்தில் இன்று மாலை பிரதமர் மோடி சாலை மார்க்கமாக சென்று மக்களை சந்திக்கிறார்
9:15 AM, 1 Dec
விலை வாசி உயர்வால் மக்கள் சிரமப்படுவதை சுட்டிக்காட்டும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பரேஷ் தனனி, தனது சைக்கிளில் கேஸ் சிலிண்டரை வைத்துக்கொண்டு வாக்களிக்க புறப்பட்டுச்சென்றார். அம்ரேலி தொகுதியில் தனது வாக்கினை பரேஷ் தனனி பதிவு செய்கிறார்.
மோடியின் மந்திரம் ஒவ்வொரு முறையும் பலனளிக்கிறது. அனைத்து இடங்களிலும் மக்கள் மனதில் பிரதமர் மோடி இருக்கிறார். பிரதமர் மோடியை மக்கள் விரும்புகின்றனர். மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். பிரதமர் மோடியின் நிலை என்னவாகும் என்று கூறியவர்கள், தங்களின் நிலையை அறிந்து கொள்வார்கள்- குஜராத் பாஜக தலைவர் சிஆர் பாட்டீல்
Modi magic works every time, everywhere. He's in people's hearts. They trust him&he's capable of meeting their expectations: Guj BJP chief CR Paatil
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: "முதல் கட்டமாக இன்று 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வாக்கினை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். குஜராத்தின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த முறை வலுவானதை செய்யுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
ગુજરાત ચૂંટણીના પ્રથમ ચરણમાં આજે 89 સીટો પર મતદાન થશે. ગુજરાતમાં આજે જે કોઈ વિધાનસભા ક્ષેત્રમાં વોટિંગ છે ત્યાંના મતદાતાઓને મારી અપીલ - "તમારી પાસે સુવર્ણ તક આવી છે, ગુજરાતના અને તમારા બાળકોના સારા ભવિષ્ય માટે વૉટ જરૂર આપો, આ વખતે કંઈક ગજબ કરીને આવો."