நாங்கள் நினைத்தால் பெரும்படை திரட்டி கர்நாடகாவுக்குள் நுழைய முடியும்: பிரேமலதா எச்சரிக்கை
ஓசூர்: மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஓசூரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பெரிய அளவில் தொண்டர்களுடன் போராட்டம் நடத்தினார்.
Recommended Video
கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. இதற்கு முறைப்படி நீர் செல்லும் கீழ் பாசன பகுதியான தமிழ்நாட்டில் கர்நாடக அரசு அனுமதி வாங்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு தமிழ்நாட்டிடம் எல்லாம் அனுமதி வாங்க முடியாது நாங்கள் கண்டிப்பாக அணை கட்டியே தீருவோம் என்று கூறி வருகிறது.
மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கான நீர் வரத்து குறையும், முக்கியமாக காவிரி கடைமடை பகுதிக்கு நீர் செல்வது தடைபடும். இது தமிழ்நாட்டின் விவசாயத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழ்நாடு
இதனால் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் ஒரே குடையின் கீழ் வந்து மேகதாது திட்டத்தை எதிர்த்து வருகிறது. திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏற்கனவே இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்திவிட்டது. தமிழ்நாடு அரசியல் கட்சிகள் இது தொடர்பாக பிரதமர் மோடியையும் சந்தித்துவிட்டன. அதேபோல் பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் தனது சந்திப்பில் மேகதாது அணைத்திட்டம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

போராட்டம்
இந்த நிலையில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஓசூரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று போராட்டம் நடத்தினார். கர்நாடகா மாநிலம் பெங்களூர் எல்லை அருகில் ஓசூரில் போராட்டம் நடத்தப்பட்டது. தேமுதிக தொண்டர்கள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்ட களத்தில் டிராக்டர் ஓட்டிச் சென்று தேமுதிகவினர் கோஷம் எழுப்பினர்.

பேச்சு
டிராக்டரில் பயணித்தபடி பிரேமலதாவும் கர்நாடக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ஓசூர் எல்லைவரை வந்துவிட்டோம். கர்நாடகா அதிக தொலைவில் இல்லை. நாங்கள் நினைத்தால் இப்போதே பெரும்படை திரட்டி பெங்களூக்குள் நுழைய முடியும். எங்களால் உங்கள் எல்லைக்குள் வர முடியும்.

ஒற்றுமை
நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நமக்குள் பிரிவினை வேண்டாம் என தமிழக விவசாயிகள் சார்பில் கூறிக்கொள்கிறேன். கர்நாடக முதலமைச்சருக்கு எச்சரிக்கையுடன் வேண்டுகோள் விடுகிறேன் மேகதாது அணை திட்டத்தை நிறுத்துங்கள். கர்நாடக- தமிழ்நாடு மக்களிடையே பிரிவினை இல்லை. அதுபோலவே தண்ணீரிலும் பிரிவினை இருக்க கூடாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications