பிஎஸ்எப் வீரர்கள் எல்லையில் தூங்கிக் கொண்டிருக்கிறார்களா? ஆர்எஸ்எஸ் தலைவருக்கு ஒவைசி கேள்வி
ஹைதராபாத்: மக்கள்தொகை சமநிலையின்மைக்கு வங்கதேசத்தில் இருந்து நடைபெறும் ஊடுருவலே காரணம் என ஆர்எஸ்எஸ் தலைவர் தத்தாத்ரேயா ஹொசபலே கூறியிருந்த நிலையில், அதற்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பதிலடி கொடுத்துள்ளார்.
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊருடுருவல் நடந்திருக்கிறது என்றால், பிஎஸ்எப் வீரர்கள் எல்லையில் தூங்கிக் கொண்டிருந்தார்களா என ஒவைசி கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், பிரித்தாளும் அரசியலை செய்து வரும் சிலர், ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மத்தியில் எப்படி பிளவை ஏற்படுத்தலாம் என்பது குறித்தே சதா சர்வக்காலமும் யோசித்து வருவதாக ஒவைசி விமர்சித்துள்ளார்.

தத்தாத்ரேயா ஆவேசம்
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயக்ராஜில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அகில இந்திய செயற்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஏராளமான ஆர்எஸ்எஸ் முக்கியத் தலைவர், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: நாட்டில் மதமாற்றம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழலில், மதமாற்றம் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு தேவை. அதனை ஏற்படுத்தவே ஆர்எஸ்எஸ் அமைப்பு முயற்சித்து வருகிறது. இதற்கு பல மாநிலங்களில் நல்ல பலனும் கிடைத்துள்ளது. இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய மக்கள், மீண்டும் தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பி வருகின்றனர்.

மக்கள்தொகை சமமின்மை
இந்தியாவில் தற்போது இந்துக்களின் மக்கள்தொகை கணிசமாக குறைந்து வருகிறது. இதற்கு மதமாற்றமும் ஒரு காரணம். அதேபோல, வங்கதேசத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட மதத்தினர் இந்தியாவுக்கு ஊருடுவி வருவதாலும், இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது. பீகாரின் வடபூர்னியா மற்றும் கதிஹார் உள்ளிட்ட மாவட்டங்களுக்குள் இந்த ஊருடுவல் அதிகமாக இருப்பதால் அந்தப் பகுதிகளில் இந்துக்களின் மக்கள்தொகை குறைகிறது. இவ்வாறு தத்தாத்ரேயா ஹொசபலே பேசினார்.

ஒவைசி கேள்வி
தத்தாத்ரேயாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக வேகமாக பரவி வந்தது. மேலும், அவரது பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகஅசாதுதீன் ஒவைசி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவல் நடப்பதால் தான் இந்துக்களின் மக்கள் தொகை குறைவதாக சிலர் கூறுகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இந்தக் கருத்தை அவர்கள் தெரிவிக்கின்றனர். அது எப்படி ஒரு நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முடியும்?

பிரியாணி சாப்பிட்டு தூங்கினார்களா?
நம் நாட்டில் ராணுவ வீரர்கள் இல்லையா? எல்லையை பாதுகாப்பதற்காகவே பிஎஸ்எப் என்ற ஒரு தனிப் படைப்பிரிவை இந்தியா வைத்துள்ளது. ஊடுருவல் நடக்கும் வரை அந்த பிஎஸ்எப் படையினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பிரியாணி சாப்பிட்டுவிட்டு தூங்கினார்களா? ஏன் இப்படி ஒரு மதத்துக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கிறீர்கள்? பிரித்தாளும் அரசியலை செய்து வரும் சிலர், ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மத்தியில் எப்படி பிளவை ஏற்படுத்தலாம் என்பது குறித்தே சதா சர்வக்காலமும் யோசித்து வருகின்றனர். இவ்வாறு அதில் ஒவைசி கூறியுள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications