நாட்டில் முதல் முறை...வாக்களிக்க லஞ்சம் கொடுத்த டி.ஆர்.எஸ். எம்.பி. மலோத் கவிதாவுக்கு 6 மாதம் ஜெயில்
ஐதராபாத்: தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி. மலோத் கவிதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மகாபூபாத் தொகுதியில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர் மலோத் கவிதா. அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வாக்காளர்களுக்கு தலா ரூ500 பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.

இந்த பணப்பட்டுவாடா செய்த சவுகத் அலி என்பவர் பறக்கும் படையினரிடம் பிடிபட்டார். வேட்பாளர் மலோத் கவிதாவுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் சவுகத் அலி.
நம்பள்ளி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை மலோத் கவிதாவும் ஒப்புக் கொண்டார்.
இந்த வழக்கில்தான் மலோத் கவிதாவுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் நாட்டில் சிட்டிங் எம்.பி. ஒருவருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை.
இருப்பினும் மேல்முறையீடு செய்வதற்காக மலோத் கவிதாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications