ஸ்பெக்ட்ரம் ஊழல்: சாட்சியம் பதிவு செய்ய ஷாஹித் பால்வா திடீர் மறுப்பு!!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு சாட்சியான ஷாஹித் பால்வா, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் தனது சாட்சியத்தைப் பதிவு செய்ய திடீரென நேற்று மறுப்புத் தெரிவித்தார். இதையடுத்து, அவரது சாட்சியம் பதிவு செய்யப்படாமலேயே இந்த வழக்கில் சிபிஐ தரப்பு குறுக்கு விசாரணையைத் தொடங்க சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி அனுமதி அளித்தார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகளிடம் கடந்த இரண்டு மாதங்களாக சாட்சியம் பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஷாஹித் பால்வா நீங்கலாக மற்ற அனைவரும், அவர்களின் தரப்பு சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களின் சாட்சியத்தைப் பதிவு செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட சிலர், தங்கள் தரப்பு சாட்சிகளாக தாங்களே ஆஜராகி சாட்சியத்தைப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, விடுபட்டுப் போன ஷாஹித் பால்வாவின் சாட்சியத்தை நேற்று பதிவு செய்ய சிறப்பு நீதிபதி சைனி அனுமதி அளித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று தொடங்கியது. அப்போது ஆஜரான ஷாஹித் பால்வா, இந்த வழக்கில் நான் குற்றம் சாட்டப்பட்டுள்ளேன். எனது தரப்பு சாட்சியத்தை நானே பதிவு செய்ய விரும்பவில்லை என்று கூறினார்.
அதைப் பதிவு செய்து கொண்ட சிறப்பு நீதிபதி சைனி, குற்றம் சாட்டப்பட்ட ஷாஹித் பால்வா தனது தரப்பு சாட்சியத்தை பதிவு செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், தற்போது அவரே அதற்கு விருப்பமில்லை என்று கூறுவதால் அவரது சாட்சியத்தைப் பதிவு செய்யத் தேவையில்லை. இந்த வழக்கில் சிலரை ஆஜர்படுத்தி விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு புதனன்று பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அமலாக்கத் துறை துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங், உதவி இயக்குநர் சத்யேந்திர சிங், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை உதவிச் செயலர் விபில் கபூர், வங்கி அதிகாரி டி. மணி ஆகியோரை அரசுத் தரப்பு சாட்சிகளாக ஆஜர்படுத்தி விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ கோரியுள்ளது. இதேபோல, இந்த வழக்கில் சிபிஐ சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கலைஞர் டிவி நிதிப் பிரிவு பொது மேலாளர் ஜி. ராஜேந்திரனிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications