ஸ்பெக்ட்ரம் ஊழல்: சாட்சியம் பதிவு செய்ய ஷாஹித் பால்வா திடீர் மறுப்பு!!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு சாட்சியான ஷாஹித் பால்வா, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் தனது சாட்சியத்தைப் பதிவு செய்ய திடீரென நேற்று மறுப்புத் தெரிவித்தார். இதையடுத்து, அவரது சாட்சியம் பதிவு செய்யப்படாமலேயே இந்த வழக்கில் சிபிஐ தரப்பு குறுக்கு விசாரணையைத் தொடங்க சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி அனுமதி அளித்தார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகளிடம் கடந்த இரண்டு மாதங்களாக சாட்சியம் பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஷாஹித் பால்வா நீங்கலாக மற்ற அனைவரும், அவர்களின் தரப்பு சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களின் சாட்சியத்தைப் பதிவு செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட சிலர், தங்கள் தரப்பு சாட்சிகளாக தாங்களே ஆஜராகி சாட்சியத்தைப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, விடுபட்டுப் போன ஷாஹித் பால்வாவின் சாட்சியத்தை நேற்று பதிவு செய்ய சிறப்பு நீதிபதி சைனி அனுமதி அளித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று தொடங்கியது. அப்போது ஆஜரான ஷாஹித் பால்வா, இந்த வழக்கில் நான் குற்றம் சாட்டப்பட்டுள்ளேன். எனது தரப்பு சாட்சியத்தை நானே பதிவு செய்ய விரும்பவில்லை என்று கூறினார்.
அதைப் பதிவு செய்து கொண்ட சிறப்பு நீதிபதி சைனி, குற்றம் சாட்டப்பட்ட ஷாஹித் பால்வா தனது தரப்பு சாட்சியத்தை பதிவு செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், தற்போது அவரே அதற்கு விருப்பமில்லை என்று கூறுவதால் அவரது சாட்சியத்தைப் பதிவு செய்யத் தேவையில்லை. இந்த வழக்கில் சிலரை ஆஜர்படுத்தி விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு புதனன்று பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அமலாக்கத் துறை துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங், உதவி இயக்குநர் சத்யேந்திர சிங், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை உதவிச் செயலர் விபில் கபூர், வங்கி அதிகாரி டி. மணி ஆகியோரை அரசுத் தரப்பு சாட்சிகளாக ஆஜர்படுத்தி விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ கோரியுள்ளது. இதேபோல, இந்த வழக்கில் சிபிஐ சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கலைஞர் டிவி நிதிப் பிரிவு பொது மேலாளர் ஜி. ராஜேந்திரனிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications