இந்த விஷயத்தில் இந்தியாவை அமெரிக்கா கூட மிஞ்ச முடியாது ... அது இதுதான்
உலக அளவில் ஃபேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருக்கும் மக்களில் இந்தியர்கள்தான் முதலிடம் பிடித்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 24 கோடியே 10 லட்சம் பேர் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களாக இருக்கிறார்கள் என்று கணக்கிட
டெல்லி: உலக அளவில் இந்தியாவிலேதான் அதிகம் பேர் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களாக இருக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மொத்தம் 24 கோடியே 10 லட்சம் பேர் இந்தியாவில் ஃபேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருக்கிறார்கள்.
ஃபேஸ்புக் சமூகவலைதளத்தை பயன்படுத்துவதில் அமெரிக்க மக்களை மிஞ்சி இந்தியா முதலிடத்துக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 24 கோடி பேர்தான்.
ஆனால் இந்தியாவிலோ 24 கோடியே 10 லட்சம் பேர் ஃபேஸ்புக்கின் பயனர்களாக உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் கால் பங்கு ஃபேஸ்புக் வாசிகளாக உலவுகிறார்கள் என்று தெரிகிறது.
உலகளவில் ஒவ்வொரு மாதமும் 2 பில்லியன் மக்கள் ஃபேஸ்புக் சமூகவலைதளத்தை பயன்படுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்திருந்த சில நாட்களிலேயே இந்த புதிய பட்டியலும் வெளியாகியுள்ளது.

நாடு வாரியாக கணக்கெடுப்பு
நாடுகள் வாரியாக ஃபேஸ்புக் பயனர்கள் எண்ணிக்கை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. உலகில் வேறு எந்த தொழில் நுட்பமும் இவ்வளவு வேகமாக பரவியது இல்லை என்கிற அளவுக்கு ஃபேஸ்புக் வளர்ச்சி இருக்கிறது.

இருமடங்கு அதிகரிப்பு
அண்மைக்காலங்களில், இந்தியாவில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இருமடங்கு அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. ஸ்மார்ட் போன்களின் வருகை சமூக வலைதள பயன்பாட்டை அதிகரிக்க வைத்துள்ளது.

6 மாதத்தில் அதிக வளர்ச்சி
அதாவது, கடந்த 6 மாதங்களில் இந்தியாவில் ஃபேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை 27% அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் 12% மட்டுமே அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களை முந்திய ஆண்கள்
இந்தியாவில் ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்போரில் 75% ஆண்களாகவே இருக்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் 54% பெண்கள் ஃபேஸ்புக் கணக்கு வைத்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

ஃபேஸ்புக் மூலம் அரசு தொடர்புகள்
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் இணையதள சேவைகள் ஃபேஸ்புக் மூலமும் மேற்கொள்ளப்படுகின்றன. அரசுகளின் திட்ட அறிமுகம், வாக்காளர் விவரங்கள் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ள ஸ்மார்ட் போன் உதவுகிறது.

செய்திகள் ஆர்வம்
ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் எல்லோருமே ஃபேஸ்புக் பக்கத்தில் வரும் செய்திகளைப் படிக்கிறார்கள். இதனால் அதன் வாசிப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
-
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப்












Click it and Unblock the Notifications