For Daily Alerts
Just In
ரூபாய் நோட்டு விவகாரம்: அருண் ஜேட்லியுடன் அதிமுக எம்பிக்கள் சந்திப்பு
செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக அருண்ஜேட்லியை அதிமுக எம்பிக்கள் சந்தித்தனர்.
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியை அதிமுக எம்பிக்கள் இன்று சந்தித்து பேசினர்.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் கூட்டுறவுத் துறை முற்றாக முடங்கிப் போய்விட்டது என்பது தமிழக அரசின் குற்றச்சாட்டு. இதையடுத்து டெல்லியில் இன்று நிதி அமைச்சர் அருண்ஜேட்லியை அதிமுக எம்பிக்கள் இன்று சந்தித்து பேசினர்.
லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, நவநீத கிருஷ்ணன், வேணுகோபால் உள்ளிட்டோர் அருண்ஜேட்லியை சந்தித்தனர். அப்போது, கூட்டுறவு வங்கிகளும் பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்;
பயிர் கடனாக ரூ3,000 கோடி உடனே வழங்க வேண்டும்; மற்ற வங்கிகளைப் போல மத்திய கூட்டுறவு வங்கிகளும் டெபாசிட் பெற அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அருண்ஜேட்லியிடம் அதிமுக எம்பிக்கள் கொடுத்தனர்.
English summary
AIADMK MPs today met Union Finance Minister Arun Jaitley on currency ban issue.
Story first published: Wednesday, November 23, 2016, 12:15 [IST]