அமர்நாத் குகை அருகே மேகவெடிப்பு.. 15 பேர் பலி.. 20க்கும் மேற்பட்டோர் மாயம்- மீட்புப் பணிகள் தீவிரம்!
ஸ்ரீநகர் : புனித யாத்திரைக்கு பக்தர்கள் செல்லும் அமர்நாத் குகை அருகே உள்ள பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 15 பேர் பலியாகினர்.
இன்று மாலை 5.30 மணியளவில் திடீரென அமர்நாத் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பால் 15 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அப்பகுதியில் மழை விட்டுவிட்ட நிலையில், வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ளவர்களை மீட்க ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அமர்நாத் புனித யாத்திரை
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோவிலில் உருவாகும் பனி லிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அமர்நாத் புனித யாத்திரை நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூன் 30ஆம் தேதி தொடங்கியது. இந்த புனித யாத்திரை, ஆகஸ்ட் 11 வரை நடக்க உள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் அங்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேகவெடிப்பு
கடல் மட்டத்தில் இருந்து, 12,755 அடி உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் யாத்ரீகர்களின் பயணத்தையும் அவர்களின் பாதுகாப்பையும் கண்காணிக்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்நிலையில் அமர்நாத் குகைக் கோவிலுக்கு அருகே இன்று மாலை 5.30 மணியளவில் மேக வெடிப்பு ஏற்பட்டது. மேகவெடிப்பால் அப்பகுதியில் மழை கொட்டித்தீர்த்த நிலையில், அமர்நாத் குகை கோவில் இன்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

15 பேர் பலி
ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில், ஆற்றின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த ஏராளமான கூடாரங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் தங்கியிருந்த 15 யாத்திரீகர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகள் தீவிரம்
மீட்புப்படை அதிகாரிகளின் கூற்றுப்படி, இதுவரை பதினைந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேருக்கும் மேல் மாயமாகியிருப்பதால் அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படையினர், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்புப் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றன.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications