பிசிசிஐ அதிகாரிகளை கட்டி வைத்து அடிக்க வேண்டும்.. மார்க்கண்டேய கட்ஜு காட்டம் !
டெல்லி: பிசிசிஐ அதிகாரிகளை கம்பத்தில் கட்டி வைத்து உதைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு ட்விட்டரில் காட்டமாக கருத்து கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக அமைப்பில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி ஆய்வு செய்தது. அந்த குழு பல்வேறு பரிந்துரைகள் செய்திருந்தது. அவற்றில் பெரும்பாலானவற்றை ஏற்க முடியாது என்று பிசிசிஐஅறிவித்து விட்டது.

மேலும் லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து ஆராய்ந்து கருத்து கூறுமாறு ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு பிசிசிஐ சார்பில் நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் பிசிசிஐ சீர்திருத்தங்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று விமர்சித்திருந்தார். மேலும் லோதா குழு அமைக்கப்பட்டதே செல்லாது என்றும் கட்ஜு கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும் லோதா கமிட்டியை சந்திக்க திட்டமிட்டிருந்த பிசிசிஐ அதிகாரிகளை சந்திக்க வேண்டாம் என்று அறிவுறித்திய கட்ஜு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கூடுதல் நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் முறையிடலாம் என்றும் பிசிசிஐக்கு அறிவுரை கூறியிருந்தார்.
இந்நிலையில் லோதா கமிட்டியின் பரிந்துரைகளுக்கு, தற்போதைய பிசிசிஐ அதிகாரிகள் புரிந்து வரும் எதிர்வினைகளுக்கு கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.
This treatment isnt enough. Aisan na manahin. Lodha shud get BCCI officials tied naked to a pole & given 100 lashes each on their behinds
— Markandey Katju (@mkatju) October 4, 2016
இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில், 'இந்த நடைமுறை மட்டும் போதுமானதல்ல; நீதிபதி லோதா பிசிசிஐ அதிகாரிகளை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து சாட்டையால் அடித்திருக்க வேண்டும்' என்று டுவிட் செய்துள்ளார். கட்ஜுவின் இந்த டிவிட் பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications