Breaking News: அயோத்தியா துணை வழக்கை டிஸ்மிஸ் செய்தது சுப்ரீம் கோர்ட்!
Recommended Video
டெல்லி: மசூதிகள், இஸ்லாமியர்களின் வழிபாட்டில் ஒருங்கிணைந்த அங்கமா என்பது குறித்து மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் (பாபர் மசூதி/ராமர்ஜென்மபூமி) யாருக்குச் சொந்தம் என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் 1994ம் ஆண்டு இஸ்மாயில் பரூக்கி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மசூதிகள், இஸ்லாம் மதத்தின் வழிபாட்டுத் தலங்கள் அல்ல என்று உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி மனு செய்யப்பட்டிருந்தது. அந்த மனு விசாரணையில் இருந்து வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண், அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண் ஆகியோர் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் இதை அரசியல் சாசன பெஞ்ச்சுக்கு மாற்றத் தேவையில்லை என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.
5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க கோரப்பட்டிருந்தது
உச்சநீதிமன்றம் இக்கோரிக்கையை நிராகரித்தது
இந்த வழக்கின் தீர்ப்பு ராமர் ஜென்மபூமி வழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்
அரசியல் ரீதியாகவும் இந்தத் தீர்ப்பு பல தாக்கங்களை ஏற்படுத்தும்
1994 பரூக்கி வழக்கின் தீர்ப்பில் இஸ்லாமியர்கள் எங்கு வேண்டுமானாலும் தொழுகை நடத்தலாம் என உத்தரவிடப்பட்டிருந்தது
மசூதிகளில் மட்டுமே தொழுகை நடப்பதில்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது