போருக்கு தயார்... ரூ. 40,000 கோடி மதிப்பிலான ஆயுத கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல்!
சீனாவுடன் யுத்தம் நடைபெறலாம் என்பதால் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்புள்ள நவீன ஆயுதங்கள் கொள்முதல் செய்துகொள்ள ராணுவத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி: போருக்கு தேவையான அதி முக்கிய நவீன ஆயுதங்களை ரூ .40 ஆயிரம் கோடிக்கு ராணுவம் நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சீனாவுடன் எல்லையில் மோதல் வலுத்து வரும் நிலையில், ராணுவ வீரர்கள் எத்தகைய சூழலையும் எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்கும்படி உயரதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ராணுவத்தின் சில பிரிவுகளில் உள்ள வெற்றிடத்தை நிரப்பி பாதுகாப்பை பலப்படுத்தும் வழக்கமான நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

போர் தவிர்க்க முடியாததாகி விடும்போது எந்த வித பின்னடைவும் ஏற்படக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளை சாதாரணமான ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறுகிறார்கள் .
30 நாட்களுக்கு போர் நீடித்தால், அதற்கு தேவையான ஆயுதங்களை வாங்குவதற்கு நிதியை தாராளமாக செலவிடவும், துணை ராணுவத் தலைமைத் தளபதிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக சர்வதேச சந்தையில் இருந்து பத்து வகையான அதிநவீன ஆயுதங்களை வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ராணுவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த உத்தரவால் தேவையான ஆயுதங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலை ராணுவத் தலைமை பெற வேண்டிய அவசியம் நேராது. இந்த ஆயுதங்களின் மதிப்பு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளதாக செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
-
காங்கிரஸை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும்.. அதிமுகவிடம் மல்லுக்கட்டும் பாஜக.. எவ்வளவு சீட் தெரியுமா? -
ஜெயலலிதா இருந்தா இப்படி நடக்குமா? மொத்தமாக கண்ட்ரோலை எடுத்த பாஜக..லிஸ்டோடு டெல்லிக்கு ஓடிய எடப்பாடி! -
நிதிஷ் குமாரின் நிலை எடப்பாடிக்கும் வருமா.. ஸ்டாலின் கவலைப்பட தேவையில்லை.. நயினார் நாகேந்திரன் பதில் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
IND Vs NZ: மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை.. வாய் பேசிய சான்ட்னரை வாயடைக்க வைத்த இந்தியப் படை! -
இந்தியாவுக்கு வெடி வைத்த டிரம்ப்! அமெரிக்காவால் நமக்கு தொட்டதெல்லாம் நஷ்டம் தான்! -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
“ஒரு டான்ஸ் ஆடியது குத்தமா.. அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்.. என்ன இப்படி ஆகிடுச்சு -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
இந்த ரெக்கார்டு போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா! பல ஆண்டு ரொக்கார்டுகளை சல்லி சல்லியாக உடைத்த SKY படை! -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில்












Click it and Unblock the Notifications