சின்னத்துடன் வாக்களித்த வாரணாசி காங். வேட்பாளர் மீது வழக்குப்பதிவு- தேர்தல் ஆணையம் உத்தரவு!!
வாரணாசி: வாக்குச்சாவடிக்குள் கட்சி சின்னத்துடன் நுழைந்து வாக்களித்த வாரணாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்க்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் அண்மையில் குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளரும் அம்மாநில முதல்வருமான நரேந்திர மோடி வாக்களித்தார். அவர் வாக்களித்த பின்னர் கட்சி சின்னமான தாமரையை கையில் ஏந்திய படி வாக்குச் சாவடி அருகே புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அந்த சின்னத்துடனேயே செய்தியாளர்களை சந்தித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அவர் மீது மாநில அரசு வழக்குப் பதிவு செய்யவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் அங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் தமது குர்தாவில் கை சின்னத்தை பொருத்தியபடியே வாக்களித்தார். இதுவும் சர்ச்சையை கிளப்பியது. அஜய் ராய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக, ஆம் ஆத்மி கட்சியினர் வலியுறுத்தினர்.
விதிமீறலே
இது குறித்து கருத்து தெரிவித்த வாரணாசி தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் பிரவீன்குமார், வாக்குச் சாவடிக்குள் சின்னங்களை காண்பிப்பது விதிமீறல்தான். இது குறித்த அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
வழக்குப் பதிவு செய்ய உத்தரவு
இதனிடையே அஜய் ராய் மீது முதல் வழக்குப் பதிவு செய்யுமாறு தலைமை தேர்தல் ஆணையம், வாரணாசி தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
உ.பி.யில் லேப் டாப் சர்ச்சை

சின்னத்துடன் காங். வேட்பாளர் வாக்களித்தது விதிமீறலே - வாரணாசி தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் சந்தெளலி என்ற வாக்குச் சாவடியில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் மற்றும் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் படத்துடன் கூடிய லேப் டாப் பயன்படுத்தப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்












Click it and Unblock the Notifications