ஒருவருக்கு ஒருவர் உதவி.. குரூப் ஸ்டடியில் சாதனை.. சத்தீஸ்கர் அரசு தேர்வில் சிறப்பிடம் பெற்ற தம்பதி!
பிலாஸ்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த கணவன்- மனைவி இருவரும் அந்த மாநில அரசின் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முதல் இரு இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அரசு தேர்வாணையம் மூலம் அரசுப் பணிகள் நிரப்பப்படுவது வழக்கம். அது போல் சத்தீஸ்கர் மாநில அரசு தேர்வாணையம் அண்மையில் தேர்வு நடத்தியது.
இந்த தேர்வில் பிலாஸ்பூரை சேர்ந்த தம்பதியான அனுபவ் சிங் மற்றும் விபா சிங் ஆகியோர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அனுபவ் சிங்கும் விபாவும் முதல் இரு இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் இருவரும் மாநில அரசு தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளோம்.
Bilaspur:Anubhav Singh&Vibha Singh,a couple has secured first&second rank, respectively, in Chhatisgarh Public Service Commission exam this year.The couple says, "It's difficult to express how happy we feel today.We both supported and helped each other throughout." #Chhattisgarh pic.twitter.com/6dOyDyfAkt
— ANI (@ANI) July 27, 2019
இதனால் நாங்கள் அடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது எப்படி என சொல்ல தெரியவில்லை. நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டு ஆதரித்தும் கொண்டோம். இதனால்தான் வெற்றி என்பது எளிதானது என்று தம்பதி தெரிவித்துள்ளனர்.