For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யூரி தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர்: பிரதமர் மோடி திட்டவட்டம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் 18 ராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்ய நேரிட்ட சம்பவத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

Culprits behind Uri attack will definitely get punished, says PM

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

  • ஜம்மு காஷ்மீரின் யூரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 தீரமிக்க ராணுவ வீரர்களை நாம் இழந்துள்ளோம். அந்த வீரர்களுக்கு என் வீரவணக்கங்கள்.
  • ராணுவ வீரர்களின் மரணம் அவர்கள் குடும்பத்துக்கு மட்டுமான இழப்பு அல்ல... தேசத்துக்கே பேரிழப்பாகும்
  • நமது ராணுவத்தின் மீது நாம் முழு நம்பிக்கை வைப்போம். நிச்சயம் யூரி தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர்.
  • ஜம்மு காஷ்மீரத்து மக்கள் தேசவிரோத சக்திகளை அடையாளம் கண்டு அவர்களிடம் விலகியிருக்கத் தொடங்கியுள்ளனர்.
  • அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம்தான் நமது நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல... பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படுத்தும்.
  • நாட்டின் குடிமக்களாகிய நாம் நமது கடமைகளை சரியாகச் செய்தால் இந்த தேசம் புதிய உயரங்களைத் தொடும்.
  • பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர்களைப் பாராட்டுகிறேன்.
  • கிராமப்புறங்களில் 2.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 1.5 கோடி கழிப்பறைகள் அடுத்த ஓராண்டுக்குள் கட்டப்படும்.
  • வரும் அக்டோபர் 2-ந் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளில் மாசற்ற வாகன பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

English summary
Prime Minister Narendra Modi today asserted that those behind the September 18 attack on an army camp at Uri will definitely get punished.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X