திட்ட கமிஷனுக்கு மாற்றாக புதிய குழு.. யஷ்வந்த் சின்கா தலைமையில் ஆலோசனை!
டெல்லி: திட்ட கமிஷனை கலைத்துவிட்டு அமைக்கப்பட இருக்கும் புதிய குழு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா தலைமையில் டெல்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘திட்ட கமிஷன் கலைக்கப்பட்டு, அதற்கு மாற்றாக புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
இளைஞர் சக்தியை நாட்டுக்கு பயன்படுத்துதல், மாநில அரசுகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்தல், மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளித்தல் போன்றவற்றை நிறைவேற்றுவதற்காக, இந்த புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று கூறினார்.

மக்களிடம் ஆலோசனை
பின்னர், புதிய திட்ட குழு எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் ஆலோசனைகள் கேட்கப்பட்டன. அதற்காக இணையதளத்தில் இடம் ஒதுக்கப்பட்டது.

டெல்லியில் ஆலோசனை கூட்டம்
இந்நிலையில், திட்ட கமிஷனுக்கு மாற்றாக கொண்டு வரப்படும் புதிய குழு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து நேற்று டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சின்கா தலைமையில்
இதில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான், ராஜ்யசபா முன்னாள் எம்.பி. என்.கே.சிங், எம்.ஜே.அக்பர், விஜய் கேல்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கலைக்க ஆதரவு
இக்கூட்டத்தில் திட்ட கமிஷனை கலைக்கும் பிரதமர் மோடியின் முடிவுக்கு ஒருமித்த ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களுக்கு நிதி
மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில், புதிய குழுவின் பங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பேசியது என்ன?
கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யஷ்வந்த்சின்கா, திட்ட கமிஷனை கலைக்கும் முடிவுக்கு ஒருமித்த ஆதரவு தெரிவிக்கப்பட்டது. புதிய குழு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து சில யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அவற்றை பிரதமரிடம் தெரிவிப்போம் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications