உ.பி, பஞ்சாப் சட்டசபை தேர்தலை முன்வைத்து மத்திய அமைச்சரவையில் மாற்றம்? பொன். ராதா பதவியும் பறிப்பு?
டெல்லி: உத்தரப்பிரதேசம், பஞ்சாப் சட்டசபை தேர்தலை முன்வைத்து மத்திய அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பதவி பறிபோகலாம் எனவும் கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்படவில்லை. முதல் முறையாக பெரிய அளவில் வரும் 19 அல்லது 20-ந் தேதிகளில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது; அல்லது ஜூன் 23,24 தேதிகளில் மாற்றம் செய்யப்படலாம் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல்களை முன்வைத்து
அடுத்த ஆண்டு நடைபெறும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா மாநில சட்டசபை தேர்தல்களை முன்வைத்து இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட இருக்கிறதாம். உள்துறை, நிதித்துறை போன்ற முக்கிய இலாகாக்களில் மாற்றம் இருக்காதாம்.

மேலும் ஒரு இணை அமைச்சர்
அதே நேரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் வெளிநாடுகளுக்கு அதிகம் பயணிக்க முடிவதில்லை. ஆகையால் அவர் பணிச்சுமையை குறைக்கும் வகையில் மேலும் ஒரு இணை அமைச்சர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மனோகர் பாரிக்கர் மாற்றம்?
கோவா மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி- மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆகையால் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் மீண்டும் கோவா மாநில அரசியலுக்கு திருப்பி அனுப்ப வாய்ப்பிருக்கிறதாம். ஆனால் மனோகர் பாரிக்கர் இதனை விரும்பவில்லை என்கின்றன மத்திய அரசு வட்டாரங்கள்.

காலி இடங்கள்
அஸ்ஸாம் முதல்வரான மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானாந்தா சோனோவால் இடத்துக்கு ஒரு அமைச்சர் நியமிக்கப்பட உள்ளார். அதேபோல் சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக இருந்த விஜய் சம்ப்பா, பாஜகவின் பஞ்சாப் மாநில தலைவராக்கப்பட்டுள்ளார். இந்த இடத்துக்கும் ஒரு அமைச்சர் நியமிக்கப்பட இருக்கிறார்.

நஜ்மாவுக்கு பதில் அக்பர்?
மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லாவுக்கு பதிலாக மூத்த பத்திரிகையாளர் எம்.ஜே. அக்பருக்கு நியமிக்கப்படக் கூடும். மகாராஷ்டிரா பாஜக தலைவர் வினய் சஹஸ்ரபுத்தேவுக்கும் மத்திய அமைச்சராகும் வாய்ப்பிருக்கிறதாம். இதனால் அமைச்சரவையில் இடம்பிடிப்பதாக 'லாபி' வேலைகள் டெல்லியில் பரபரத்து கொண்டிருக்கிறது.

பொன். ராதா பதவி அம்போ!
இதேபோல் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அண்மைக்காலமாக குளச்சல் திட்டத்தை முன்வைத்து ராஜினாமா செய்வேன் என கூறிவருகிறார். உண்மையில் அமைச்சரவை மாற்றத்தின் போது பொன். ராதாகிருஷ்ணன் பதவி பறிக்கப்படலாம் என்பதால் அனுதாபம் தேடும் வகையில் இப்படி கூறிவருகிறார் என பாஜக வட்டாரங்களை மேற்கோள் காட்டி நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது அது உண்மைதான் என்கின்றன டெல்லி வட்டாரங்கள். இந்த அமைச்சரவை மாற்றத்தில் பொன். ராதாகிருஷ்ணன் பதவியும் பறிபோகிறதாம்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications