லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலையை குறிப்பிடாமல் பாஜகவினர் தாக்கப்பட்டதாக 2-வது எப்.ஐ.ஆர். பதிவு!
லக்கிம்பூர்: உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்த விவகாரத்தில் போலீசார் 2-வது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அதில் விவசாயிகாள் படுகொலை குறித்து குறிப்பிடாமல் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து மட்டுமே பதிவு செய்திருக்கின்றனர்.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் டெல்லியைத் தொடர்ந்து ஹரியானா, உ.பி.யில் நடைபெற்று வருகிறது. உ.பி.யில் கடந்த 3-ந் தேதியன்று துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா பங்கேற்ற நிகழ்ச்சி லக்கிம்பூர் அருகே நடைபெற்றது.

லக்கிம்பூர் படுகொலைகள்
இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தினர். அப்போது அமைதியாக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது ஜீப்பை ஏற்றியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து வன்முறை வெடித்தது. இந்த சம்பவங்களில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.

மத்திய அமைச்சர் மகன் கைது
விவசாயிகள் மீது ஜீப்பை ஏற்றி படுகொலை செய்த வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். இந்த நிலையில் லக்கிம்பூர் வன்முறைகள் தொடர்பாக அக்டோபர் 4-ந் தேதி போலீசார் 2-வது எப்.ஐ.ஆர். ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

போலீசாரின் 2-வது எப்.ஐ.ஆர்.
பாஜகவின் சுமித் ஜெய்ஸ்வால் என்பவர் கொடுத்த புகாரின் அடிபப்டையில் இந்த எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. விவசாயிகளை படுகொலை செய்த காரில் இருந்தவராம் இந்த சுமித் ஜெய்ஸ்வால். அதில், 2 பாஜக தொண்டர்கள், பத்திரிகையாளர் ரமன் காஷ்யப், கார் ஓட்டுநர் ஹரி ஓம் ஆகியோர் கொல்லப்பட்டது குறித்து எழுதப்பட்டிருக்கிறது. சமூக விரோதிகளால் இந்த கொலை நடந்தது என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டதால் வன்முறை வெடித்தது என்பதை போலீசார் குறிப்பிடவில்லை.

எப்.ஐ.ஆர். சொல்வது என்ன?
மேலும் கார் ஓட்டுநர் ஹரி ஓம், வாகனத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டு மூங்கில் தடிகள், வாள்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்கிறது அந்த எப்.ஐ.ஆர். அதேபோல் சுபம் மிஸ்ரா என்பவரையும் சமூக விரோத கும்பல் பிடித்து தாக்கியதால் கொல்லப்பட்டார் எனவும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அடையாளம் தெரியாத 2 பாஜக தொண்டர்களும் அந்த சமூக விரோத கும்பலால் கொல்லப்பட்டதாகவும் போலீசாரின் 2-வது எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications