மகாராஷ்டிரா ராணுவ வெடிமருந்து கிடங்கில் பயங்கர தீ: 17 பேர் பலி, 19 பேர் காயம்
நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் புல்காவ்னில் உள்ள ராணுவத்திற்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர், 19 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் வர்தா அருகே உள்ள புல்காவ்னில் ராணுவத்திற்கு சொந்தமான பெரிய வெடிமருந்து கிடங்கு ஒன்று உள்ளது. அந்த கிடங்கில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
Wardha: 2 army officers among 17 killed,18 injured in fire at central ammunition depot at Pulgaon(70kms from Nagpur) pic.twitter.com/sPMl84cwUM
— ABP News (@abpnewstv) May 31, 2016
இந்த விபத்தில் 17 வீரர்கள் உடல் கருகி பலியாகியுள்ளனர். மேலும் 17 ஜவான்கள் மற்றும் 2 ராணுவ அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட ஷெட்டில் தீ அணைக்கப்பட்டுள்ளது. நிலைமை தற்போது கட்டுக்குள் வந்துள்ளது என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை இன்று பார்வையிடக்கூடும் என்று கூறப்படுகிறது.