மராத்தா சமூகத்துக்கான 16% இடஒதுக்கீடு:மும்பை கோர்ட் தடை! முஸ்லிம்களுக்கான 5% ஒதுக்கீட்டுக்கு அனுமதி
மும்பை: மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்துக்கு முந்தைய காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் 16% இடஒதுக்கீடு அளித்ததற்கு மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதே நேரத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி நிறுவனங்களில் 5% இடஒதுக்கீடு தொடர மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் வெறும் 6 இடங்களைத்தான் கைப்பற்றியது. இதனால் சட்டசபை தேர்தலிலும் படுதோல்வியை சந்திக்க நேரிடுமோ எனக் கருதி கல்வி, வேலைவாய்ப்புகளில் மராத்தா வகுப்பினருக்கு 16%, முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கிடு வழங்கிட அவசர சட்டம் பிறப்பித்தது.
இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீட்டின் அளவானது 73% என அதிகரித்தது. ஆனால் உச்சநீதிமன்றமோ 50%க்கும் மேல் இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று நிர்ணயித்துள்ளதை சுட்டிக் காட்டி இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் ஊடகவியலாளர் கேதன் டிரோட்கர் பொதுநலன் வழக்கைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், மராத்தா சமூகத்தினருக்கான 16% இடஒதுக்கீட்டுக்குத் தடை விதித்தது; அதே நேரத்தில் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கான 5% இடஒதுக்கீடு தொடர அனுமதி அளித்துள்ளது.
மும்பை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கூறியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications