முல்லைப் பெரியாறு அணையில் இடையூறு செய்யும் கேரளா.. சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பான வழக்கில் கேரளாவுக்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு கேரள அரசு இடையூறு செய்வதாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கேரளாவிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஜூலை 2வது வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு சட்டப்போராட்டம் நடத்தி முல்லை பெரியாறு அணை உயரத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த அனுமதி பெறப்பட்டது. அதற்குப் பிறகு தொடர்ந்து 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்காக 7.85 கோடி ரூபாய் அணையை பலப்படுத்துவதற்காக, சீரமைப்பதற்காக இன்றைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, கேரள அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு தரவில்லை. அதனால்தான் பணிகளில் காலதாமதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.