திட்டக் கமிஷனுக்கு மூடு விழா! பொதுமக்களிடம் ஆலோசனைகளை கேட்கிறார் பிரதமர் மோடி!!
டெல்லி: "திட்டக் கமிஷன்" என்ற அமைப்புக்கு மாற்றாக ஒரு புதிய அமைப்பை உருவாக்குவதற்கான யோசனைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று கொடியேற்றி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திட்டக் கமிஷன் என்ற அமைப்பு முறையை மூடுவதற்கான காலம் வந்துவிட்டது என்று கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இருப்பினும் திட்டக் கமிஷனை மாற்றி அமைப்பதில் பிரதமர் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இத்திட்டக் கமிஷனுக்கு மாற்றாக 5 சிந்தனையாளர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைக்க மோடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடியை தலைவராக கொண்ட இக்குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, பொருளாதார வல்லுநர்கள் அரவிந்த் பங்கரியா, பிபேக் டெப்ராய் ஆகியோர் சேர்க்கப்பட இருக்கின்றனர்.
அத்துடன் மேலும் 2 பொருளாதார வல்லுநர்களும் இக்குழுவில் இடம்பெறக் கூடும். இதற்கான முறையான அறிவிப்பு ஓரிருநாளில் வெளியாகக் கூடும் என்று கூறப்படுகிறது.
பிரதமர் அழைப்பு
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திட்டக் கமிஷனுக்கு மாற்றாக 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ற ஒரு அமைப்பு முறை தேவை. இதில் மாநிலங்களின் பங்களிப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை பொதுமக்களும் தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications