ஊழலையும், கருப்பு பண முதலைகளையும் நாங்கள் சும்மா விடமாட்டோம்- மோடி
Recommended Video

டெல்லி: ஊழலையும் கருப்பு பண முதலைகளையும் நாங்கள் சும்மா விடமாட்டோம் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.
நாட்டின் 72-ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் கருப்பு பணம் பதுக்குவோருக்கும் மன்னிப்பே கிடையாது. அவர்களை தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஊழலையும், கருப்பு பண முதலைகளையும் நாங்கள் சும்மா விடமாட்டோம்.

ஏழைகளின் குரல்
டெல்லி வீதிகளில் இப்போது 'பவர் புரோக்கர்கள்' குரல் ஓய்ந்துவிட்டது. பவர் புரோக்கர்களுக்கு பதில் ஏழைகளின் குரல்தான் இப்போது அரசால் கேட்கப்படுகிறது.

பணம்
நலத்திட்ட உதவிகளுக்கான பணம் போலியான கரங்களுக்கு சென்றது நிறுத்தப்பட்டுள்ளது. உண்மையான பலனாளிகளுக்குதான் இப்போது பணம் சென்று சேருகிறது.

வளர்ந்து வருகிறது
முறைகேடாக சென்று கொண்டிருந்த ரூ.90,000 கோடி பணத்தை தடுத்து நிறுத்தியுள்ளோம். நியாயமாக வரி செலுத்துவோரால்தான் இந்த நாடு வளர்ந்து வருகிறது. ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த வரி பணம் பயனாகிறது. பலாத்கார மனநிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும்.

மிருகங்கள்
மத்திய பிரதேசத்தில் பலாத்கார குற்றவாளிக்கு விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. சட்டமே உயர்ந்தது, யாரும் சட்டத்தை கையில் எடுக்க கூடாது. பாலியல் குற்றங்களை செய்வோர் மிருகங்கள். அவர்கள் மன்னிக்கப்பட கூடியவர்கள் அல்ல என்றார் பிரதமர் மோடி.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications