ஊழலையும், கருப்பு பண முதலைகளையும் நாங்கள் சும்மா விடமாட்டோம்- மோடி
Recommended Video

டெல்லி: ஊழலையும் கருப்பு பண முதலைகளையும் நாங்கள் சும்மா விடமாட்டோம் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார்.
நாட்டின் 72-ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் கருப்பு பணம் பதுக்குவோருக்கும் மன்னிப்பே கிடையாது. அவர்களை தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஊழலையும், கருப்பு பண முதலைகளையும் நாங்கள் சும்மா விடமாட்டோம்.

ஏழைகளின் குரல்
டெல்லி வீதிகளில் இப்போது 'பவர் புரோக்கர்கள்' குரல் ஓய்ந்துவிட்டது. பவர் புரோக்கர்களுக்கு பதில் ஏழைகளின் குரல்தான் இப்போது அரசால் கேட்கப்படுகிறது.

பணம்
நலத்திட்ட உதவிகளுக்கான பணம் போலியான கரங்களுக்கு சென்றது நிறுத்தப்பட்டுள்ளது. உண்மையான பலனாளிகளுக்குதான் இப்போது பணம் சென்று சேருகிறது.

வளர்ந்து வருகிறது
முறைகேடாக சென்று கொண்டிருந்த ரூ.90,000 கோடி பணத்தை தடுத்து நிறுத்தியுள்ளோம். நியாயமாக வரி செலுத்துவோரால்தான் இந்த நாடு வளர்ந்து வருகிறது. ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த வரி பணம் பயனாகிறது. பலாத்கார மனநிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும்.

மிருகங்கள்
மத்திய பிரதேசத்தில் பலாத்கார குற்றவாளிக்கு விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. சட்டமே உயர்ந்தது, யாரும் சட்டத்தை கையில் எடுக்க கூடாது. பாலியல் குற்றங்களை செய்வோர் மிருகங்கள். அவர்கள் மன்னிக்கப்பட கூடியவர்கள் அல்ல என்றார் பிரதமர் மோடி.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications