கைது செய்யப்பட்டார் இந்தியாவின் பின்லேடன்.. அப்துல் சுபானை மடக்கி பிடித்த டெல்லி போலீஸ்!
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த முக்கிய தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
டெல்லி: அப்துல் சுபான் குரேஷி இந்தியாவின் பின்லேடன் என்று அழைக்கப்பட்டு வந்தவர். இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா என நிறைய நாட்டு உளவுப்படை இவரை தீவிரமாக தேடி வந்தது.
உலகில் இருக்கும் பல தீவிரவாத இயக்கங்களுடன் இவர் நேரடி தொடர்பில் இருந்தார். குஜராத்தில் நடந்து குண்டுவெடிப்புகளை இவர்தான் நடத்தியது என்றும் கூறப்பட்டது.
தற்போது இவர் டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர் குடியரசு தினம் அன்று நாச வேலைகள் நடத்த திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

யார்
அப்துல் சுபான் குரேஷி இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் செயல்பட்டு வந்த முக்கியமான தீவிரவாதி ஆவார். இவர் கணினி பொறியியல் பட்டம் பெற்றவர். படிப்பை முடித்து ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு பின் முஜாஹிதீன் அமைப்பில் சேர்ந்தார்.

மாஸ்டர் மைண்ட்
குஜராத்தில் உள்ள அஹமதாபாத் மற்றும் சூரத்தில் 2008 ஜூலை மாதம் 26ம் தேதி தொடர்ச்சியாக இருபது இடங்களில் குண்டு வெடித்தது. இந்த அனைத்து குண்டையும் தயார் செய்து கொடுத்தது இவர்தான். இதில் மொத்தம் 56 பேர் மரணம் அடைந்தார்கள். அதன்பின் குஜராத்தில் நடந்த சிறு சிறு குண்டுவெடிப்புகளுக்கும் இவர் காரணமாக இருந்தார்.

தொடர் திட்டங்கள்
அதேபோல் இவர் பெங்களூரில் 2014ல் நடந்த குண்டுவெடிப்புக்கும் காரணமாக இருந்தார். 2010ல் டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் மொத்தம் 20 பேர் பலியானார்கள். அதற்கும் இவர்தான் மூளையாக செயல்பட்டு இருக்கிறார். இவரை கடந்த 12 வருடமாக போலீஸ் தேடி வந்தது.

கைது செய்யப்பட்டார்
பல நாட்டு உளவுப்படை இவரை பிடிக்க முயற்சி செய்தது. ஆனால் தற்போது டெல்லி போலீஸ் இவரை கைது செய்து இருக்கிறது. டெல்லியில் உள்ள ஒரு மார்க்கெட்டில் வைத்து இவரை கைது செய்து இருக்கிறது. தற்போது 46 வயது நிரம்பியிருக்கும் சுபானுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications