பஞ்சாபில் ராணுவ சீருடை போன்ற ஆடைகளை பொதுமக்கள் அணிய வேண்டாம்: ராணுவம் அறிவுறுத்தல்
சண்டிகர்: தீவிரவாத தாக்குதலை தடுக்க பொதுமக்கள் ராணுவ சீருடை போன்ற ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும் என்றும் கடை உரிமையாளர்கள் போர் உடைகள் விற்பதை தவிர்க்க வேண்டும் என்று ராணுவம் அறிவுறுத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் 2 ஆம் தேதி நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். நான்கு நாள் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் வீர மரணம் அடைந்ததனர்.

இந்நிலையில் விழாக் காலங்களில் ராணுவம், போலீஸ் உடைகளை ஒரு சிலர் அணிவது வழக்கம். ஆனால் சண்டிகரில் ராணுவ உடைகள் அணிவதற்கு புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் அதிகாரபூர்வ செய்திதொடர்பாளர் ஒருவர் கூறுகையில், .தனியார் பாதுகாப்பு நிறுவனங்களும், காவல்துறையினரும் மற்ற மத்திய படைகளும் போர் சீருடைகளை அணிய வேண்டாம். இது அதிகாரபூர்வமான அறிவிப்பு அல்ல மேலும் இந்த வகையில் ஆடை அணிவது தவறான எச்சரிக்கைக்கு வழிகோலும் என்றும் அவர் கூறினார்.
ராணுவ சீருடைகளை விற்பனை செய்ய விரும்பும் கடை உரிமையாளர்கள் அருகில் உள்ள ராணுவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யலாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதோபோல் டெய்லர் கடையில் யாரெனும் ராணுவ உடை தைப்பதற்கு வந்தால் அவர்களிடம் போட்டோ ஒட்டிய அட்டையில் சுய கையெப்பம் வாங்கிய பின்னரே ஆடை தைத்து கொடுக்கமாறு கூறப்பட்டுள்ளது. இதேபோல் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியிலும் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications