பஞ்சாபில் ராணுவ சீருடை போன்ற ஆடைகளை பொதுமக்கள் அணிய வேண்டாம்: ராணுவம் அறிவுறுத்தல்
சண்டிகர்: தீவிரவாத தாக்குதலை தடுக்க பொதுமக்கள் ராணுவ சீருடை போன்ற ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும் என்றும் கடை உரிமையாளர்கள் போர் உடைகள் விற்பதை தவிர்க்க வேண்டும் என்று ராணுவம் அறிவுறுத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் 2 ஆம் தேதி நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். நான்கு நாள் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் வீர மரணம் அடைந்ததனர்.

இந்நிலையில் விழாக் காலங்களில் ராணுவம், போலீஸ் உடைகளை ஒரு சிலர் அணிவது வழக்கம். ஆனால் சண்டிகரில் ராணுவ உடைகள் அணிவதற்கு புதிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் அதிகாரபூர்வ செய்திதொடர்பாளர் ஒருவர் கூறுகையில், .தனியார் பாதுகாப்பு நிறுவனங்களும், காவல்துறையினரும் மற்ற மத்திய படைகளும் போர் சீருடைகளை அணிய வேண்டாம். இது அதிகாரபூர்வமான அறிவிப்பு அல்ல மேலும் இந்த வகையில் ஆடை அணிவது தவறான எச்சரிக்கைக்கு வழிகோலும் என்றும் அவர் கூறினார்.
ராணுவ சீருடைகளை விற்பனை செய்ய விரும்பும் கடை உரிமையாளர்கள் அருகில் உள்ள ராணுவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யலாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதோபோல் டெய்லர் கடையில் யாரெனும் ராணுவ உடை தைப்பதற்கு வந்தால் அவர்களிடம் போட்டோ ஒட்டிய அட்டையில் சுய கையெப்பம் வாங்கிய பின்னரே ஆடை தைத்து கொடுக்கமாறு கூறப்பட்டுள்ளது. இதேபோல் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியிலும் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications