நளினி உட்பட 4 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு!
டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 4 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று மனுத்தாக்கல் செய்தது. இம்மனு மீது வரும் 27-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கான தூக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக்கியது. அத்துடன் அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருடன் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.
மத்திய அரசு அவசரம் அவசரமாக தாக்கல் செய்த அந்த மனுவில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்கக் கூடாது என்று மட்டுமே தெரிவித்திருந்தது. அதை ஏற்று உச்சநீதிமன்றம் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெறும் கைதிகளை விடுதலை செய்வதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி இடைக்கால தடை விதித்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உட்பட 4 பேரையும் விடுதலை செய்யவும் தடை கோரப்பட்டது. அது குறித்து தனியாக மனுத்தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் உச்சநீதிமன்றத்தின் தடை மூன்று பேர் விடுதலைக்கு மட்டும் பொருந்துமா? அல்லது 7 தமிழருக்கும் பொருந்துமா? என்ற சட்ட குழப்பம் ஏற்பட்டிருந்தது.
இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்களோ சட்டப்படி மூன்று பேரின் விடுதலைக்குத்தான் இடைக்கால தடை பொருந்தும் என்றும் குறிப்பிட்டனர். இதனால் எஞ்சிய 4 பேர் விடுவிக்கப்படலாம் என்றும் இல்லை உச்சநீதிமன்றம் 'தற்போதைய நிலை' தொடரும் என்று கூறியிருப்பதால் யாருடைய விடுதலைக்கும் தற்போது சாத்தியம் இல்லை என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நளினி உட்பட 4 பேர் விடுதலைக்கு எதிராகவும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. இம்மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இதன் மீது வரும் 27-ந் தேதி விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications