அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செல்லுமா? தேர்தல் ஆணைய முடிவு என்று வெளியாகிறது தெரியுமா?
அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது குறித்த இறுதி முடிவை வரும் 20ஆம் தேதிக்குள் அறிவிக்கவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தொடருவாரா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவை அக்கட்சியின் சட்டவிதிகளை ஆராய்ந்து வரும் 20-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் இறுதி முடிவு அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளவுப்பட்டது.
இதைத் தொடர்ந்து அதிமுக சட்டவிதிகளின் படி அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதால் அந்த நியமனம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ் அணியினர் நாடினர்.

61 பக்கங்கள் பதில் மனு
இந்த புகார் மனுவுக்கு பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அளித்ததன் பேரில் சசிகலா பதலளித்தார். அதேபோல் 61 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை ஓபிஎஸ் தரப்பினரும் அளித்தனர்.

உண்மையான அதிமுக
இந்நிலையில் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்பதால் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து வலியுறுத்தினர்.

20-க்குள் முடிவு
மேலும் அதிமுக பொதுச் செ்யலாளராக சசிகலாவின் நியமனத்தையும் செல்லாது என்று அறிவிக்கவும் வலியுறுத்தினர். இந்த நியமனம் விவகாரம் குறித்து வரும் 20-ஆம் தேதிக்குள் முடிவெடுக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்கட்சி சட்டங்கள் ஆய்வு
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கையில், அதிமுக பொதுச் செயலாளர் நியமனம் தொடர்பாக சசிகலா தரப்பு, ஓபிஎஸ் தரப்பு மனுக்களை பரிசீலனை செய்து வருகிறோம். அதிமுவின் உள்கட்சி சட்டத்திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு அந்த நியமனம் செல்லுமா செல்லாதா என்பது குறித்து மார்ச் 20-ஆம் தேதிக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முக்கியத்துவம் வாய்ந்தது
ஏப்ரல் 12-ஆம் தேதி அன்று ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் என்ற போட்டி நடந்து வருவதால் தேர்தல் ஆணையத்தின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் பதிலின் மூலம் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதும் தெரியவரும்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications