ரூபாய் நோட்டு தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு
ரூபாய் நோட்டு தொடர்பான வழக்குகளின் விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிரான அனைத்து வழக்குகளின் விசாரணையையும் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் மத்திய அரசின் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
மேலும் அனைத்து வழக்குகளையும் விசாரிக்கவும் தயார் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்குர் தலைமையிலான பெஞ்ச் தெரிவித்தது. இது தொடர்பான இன்று முழுமையான விசாரணை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று அனைத்து வழக்குகள் மீதான விசாரணையும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்றைய விசாரணையின் போது, கிராமப்புற பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர்கள் கபிசிபல், ப சிதம்பரம் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டனர்.
இதையடுத்து கூட்டுறவு வங்கிகள் பாதிக்காத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications