கர்நாடகாவில் காட்டுத் தீயை அணைக்கச் சென்றபோது யானை தாக்கி தமிழக வனத்துறை உயர்அதிகாரி பலி
மைசூர் : கர்நாடகா அருகே நாகரகொலெ வனப்பகுதியில் காட்டுத் தீயை அணைக்கச் சென்ற தமிழக வனத்துறை அதிகாரி காட்டுயானை தாக்கியதில் மணிகண்டன் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், இவர் கடந்த இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் தேர்வு செய்யப்பட்டு 2001ம் ஆண்டு முதல் ஐ.எப்.எஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.

இவர் கர்நாடகத்திலுள்ள நாகரகொலெ புலிகள் காப்பகத்தில் முதன்மை வனப்பாதுகாவலராகவும், கள இயக்குநராகவும் பணியாற்றி வந்தார். கோடைகாலம் ஆரம்பமானதை அடுத்து, சனிக்கிழமை அன்று கபினி அணை அருகில் உள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது.
இதனைத் தடுக்கும் முயற்சியல் தனது குழுவினருடன் டி.பி.குபே வனப்பகுதியில் தனது குழுவினருடன் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக காட்டுக்குள் இருந்து ஓடி வந்த யானை ஒன்று வனத்துறை ஊழியர்களைத் தாக்கியது.
இதில், மணிகண்டன் அந்த யானையிடம் சிக்கிக்கொண்டார். அப்போது அந்த யானை தாக்கியதில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த மணிகண்டனை, வனத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, அவரது உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டது. அவரின் உடலுக்கு தேனிமாவட்ட ஆட்சியர் பல்லவி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மணிகண்டனின் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் இரங்கல் பதிவிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications