நீட் பாணியில் நீதிபதிகளுக்கும் தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு! மத்திய அரசின் அடுத்த பகீர்
டெல்லி: கீழ்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தின்போதும் நீட் போல பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள தகவல் அம்பலமாகியுள்ளது.
நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, நீதித்துறை செயலாளர் சினேகலதா ஸ்ரீவஸ்தவா உச்ச நீதிமன்ற பொது செயலாளருக்கு எழுதிய கடிதத்தை அடிப்படையாக கொண்டு உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், நீதிபதிகள் ஏ.கே.கோயல், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது புது தகவல் ஒன்று வெளியானது.

தேர்வு அமைப்பு
அதாவது, கீழ் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு பல்வேறு யோசனைகளை தெரிவித்திருந்ததாம். அதில் முக்கியமானது, கீழ் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு மத்திய தேர்வு அமைப்பை செயல்படுத்தும் யோசனையாகும்.

நீட் போன்றது
மாநில பணியாளர் தேர்வு ஆணையங்கள் நடத்துவது போல்தான் நீதிபதிகள் தேர்வு நடக்கும் என்றபோதிலும், நீட் தேர்வு போன்று பொதுவான ஒரே மாதிரி தேர்வு வழியாக அனைத்து மாநிலங்களிலும் நீதிபதிகள் நியமனம் நடக்கும்.

மாநில அரசுகள் கருத்து
இதுகுறித்து அனைத்து மாநிலங்களும் ஜூன் 30க்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும், என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கு முன்னுரிமை கொடுக்கும், தமிழகம் என்ன கருத்தை தெரிவிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இதில் ஏற்பட்டுள்ளது.

நிலுவை வழக்குகள்
நாடு முழுவதுமாக மாவட்ட நீதிமன்றங்களில் மொத்தம் 2.8 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுமார் 5 ஆயிரம் நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. நீதித்துறையின் 2015-16ம் ஆண்டு அறிக்கையில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நீதிக்கு ஆபத்தா?
நீட் தேர்வால் ஏழைகள், பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் பாதிக்கப்படுவதாகவும், பணக்காரர்களும், முன்னேறிய ஜாதியினருமே டாக்டர்களாக வலம் வரும் காலம் உருவாக்கப்படுவதாகவும் கூறப்படும் நிலையில், நீதிபதிகள் தேர்விலும் பொது நுழைவுத் தேர்வுக்கு அரசு சம்மதித்தால், அரசினர் சட்டக் கல்லூரிகளில் பயின்ற சாமானிய பின்புல மக்கள் எப்படி நீதித்துறையில் கோலோச்ச முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications