நரேந்திர மோடி 'ஆப்' பயனாளிகள் தகவலை திருடியதா? மத்திய அமைச்சர் விளக்கம்
நரேந்திர மோடி செயலியில் தகவல்கள் கசிவதாக வந்த குற்றச்சாட்டுகள் போலியானவை என மத்திய அமைச்சர் அல்போன்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் உருவாக்கப்பட்ட செயலி மூலம் தகவல்கள் வெளிநாட்டு நிறுவனத்துக்கு கசிவதாக வந்த குற்றச்சாட்டுகள் கட்டுக்கதைகள் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கேஜே அல்போன்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் செயல்படும் செயலியில் பதிவு செய்யப்படும் இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களுக்கே தெரியாமல் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு தரப்படுவதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்று குற்றம்சாட்டியது.
கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனத்தின் மூலம் பேஸ்புக் விவரங்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தாரைவார்க்கிறார்
ராகுல்காந்தியும் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுடன் உரையாடுவதற்காக உருவாக்கப்பட்ட செயலி மூலம் அமெரிக்க நிறுவன நண்பர்களுக்கு தாரை வார்க்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

ராகுலுக்கு தொழில்நுட்பம் தெரியாது
இதை பிரதமர் அலுவலகம் மறுத்தது. மேலும் ராகுலுக்கு தொழில்நுட்பம் குறித்து ஒன்றும் தெரியாது என்று கூறப்பட்டது. மோடி செயலி மூலம் பயனாளிகளின் ஆதார் எண், வங்கி தகவல்கள் திருடப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவை கட்டுக்கதைகள்
இதுகுறித்து மத்திய இணையமைச்சர் கேஜே அல்போன்ஸ் கூறுகையில் உங்கள் தகவல்களை வெளிநாட்டு நிறுவனத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அளிப்பார் என்று நம்புகிறீர்களா. அதெல்லாம் கட்டுக்கதைகள்.

தகவல்கள் பாதுகாப்பாக உள்ளன
ஆதார் அட்டையில் பெயர் மற்றும் முகவரி தானே கொடுத்துள்ளீர்கள். உங்கள் தகவல்கள் திருடப்படாது என்பதை உறுதியாக கூறுகிறேன். அவை முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன. ஆதார் தகவல்களை பெற அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார் அல்போன்ஸ்.
-
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications