நரேந்திர மோடி 'ஆப்' பயனாளிகள் தகவலை திருடியதா? மத்திய அமைச்சர் விளக்கம்
நரேந்திர மோடி செயலியில் தகவல்கள் கசிவதாக வந்த குற்றச்சாட்டுகள் போலியானவை என மத்திய அமைச்சர் அல்போன்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் உருவாக்கப்பட்ட செயலி மூலம் தகவல்கள் வெளிநாட்டு நிறுவனத்துக்கு கசிவதாக வந்த குற்றச்சாட்டுகள் கட்டுக்கதைகள் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கேஜே அல்போன்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் செயல்படும் செயலியில் பதிவு செய்யப்படும் இந்தியர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களுக்கே தெரியாமல் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு தரப்படுவதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்று குற்றம்சாட்டியது.
கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா நிறுவனத்தின் மூலம் பேஸ்புக் விவரங்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தாரைவார்க்கிறார்
ராகுல்காந்தியும் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுடன் உரையாடுவதற்காக உருவாக்கப்பட்ட செயலி மூலம் அமெரிக்க நிறுவன நண்பர்களுக்கு தாரை வார்க்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

ராகுலுக்கு தொழில்நுட்பம் தெரியாது
இதை பிரதமர் அலுவலகம் மறுத்தது. மேலும் ராகுலுக்கு தொழில்நுட்பம் குறித்து ஒன்றும் தெரியாது என்று கூறப்பட்டது. மோடி செயலி மூலம் பயனாளிகளின் ஆதார் எண், வங்கி தகவல்கள் திருடப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவை கட்டுக்கதைகள்
இதுகுறித்து மத்திய இணையமைச்சர் கேஜே அல்போன்ஸ் கூறுகையில் உங்கள் தகவல்களை வெளிநாட்டு நிறுவனத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அளிப்பார் என்று நம்புகிறீர்களா. அதெல்லாம் கட்டுக்கதைகள்.

தகவல்கள் பாதுகாப்பாக உள்ளன
ஆதார் அட்டையில் பெயர் மற்றும் முகவரி தானே கொடுத்துள்ளீர்கள். உங்கள் தகவல்கள் திருடப்படாது என்பதை உறுதியாக கூறுகிறேன். அவை முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன. ஆதார் தகவல்களை பெற அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார் அல்போன்ஸ்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications