வீரப்பன் கூட்டாளி சைமன் மரணம்.. சித்ரவதை செய்து கொல்லப்பட்டாரா என சந்தேகம்?
கர்நாடக சிறையில் உயிரிழந்த வீரப்பன் கூட்டாளி சைமன் சிறையில் சித்ரவதை செய்து கொல்லப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பெங்களூரு: கர்நாடக சிறையில் உயிரிழந்த வீரப்பன் கூட்டாளி சைமன் சிறையில் சித்ரவதை செய்து கொல்லப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலம் கொள்ளேகால் அருகே உள்ள ஒட்டர்தொட்டியை சேர்ந்தவர் சைமன். வீரப்பன் கூட்டாளியான இவர் 1993ஆம் ஆண்டு நடைபெற்ற கண்ணிவெடி தாக்குதலில் கர்நாடக போலீசார் 22 பேர் உயிரிழந்த வழக்கில் கைதானார்.
சைமன் உள்ளிட்ட 4 பேருக்கு தொடக்கத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பிறகு மரண தண்டனையாக மாற்றி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆயுள் தண்டனையாக குறைப்பு
இதைத்தொடர்ந்து மனித உரிமை அமைப்புகள் உச்சநீதிமன்றம் வரை சென்று சட்ட போராட்டம் நடத்தின. இந்த நிலையில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக நிறுத்தி வைக்கப்பட்டது.

உறவினர்கள் கோரிக்கை
இந்நிலையில் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்ட சைமனுக்கு கடந்த ஓராண்டாகவே உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வெளியில் சென்று சிகிச்சையளிக்குமாறு சைமனும் அவரது உறவினர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சிறை நிர்வாகம் மறுப்பு
ஆனால் சிறை நிர்வாகம் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவருக்கு சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றிரவு சைமனின் உடல்நிலை மோசமானது.
இதையடுத்து மைசூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சைமனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சிறையில் சித்ரவதை
கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள சைமனுக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் சைமன் திடீரென உயிரிழந்த சம்பவம் அவர் சிறையில் சித்ரவதை செய்து கொல்லப்பட்டாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications