தமிழகத்தில் 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் பல்வேறு துறைகளின் இயக்குனர்கள் உள்பட 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் முக்கிய துறைகளில் பணிபுரிந்து வரும் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆனந்த்ராவ் விஷ்ணு பட்டேல் - மின் ஆளுமை ஆணையர்
இன்னசன்ட் திவ்யா- கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர்
பிரபுசங்கர் - திண்டிவனம் சார் ஆட்சியர்
ஷமீரன்- மீன் வளதுறை கூடுதல் ஆட்சியர், ராமநாதபுரம்
ஆகாஷ்- சேரன்மகாதேவி சார் ஆட்சியர்
லலிதா- பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர்
அமர் குஷாவா- உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர்
ராகுல்நாத்- கன்னியாகுமரி மாவட்ட ஊரக மேம்பாட்டு துறை செயலர்
கஜலட்சுமி- சேலம் மேக்னசைட் லிமிட்டெட் மேலாண் இயக்குனர்.
ஸ்ரீதர்- தர்மபுரி சர்க்கரை கூட்டுறவு ஆலை நிர்வாக இயக்குனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.