தூத்துக்குடி அருகே புதிய மதுக்கடை திறக்க முயற்சி: 17 கிராம மக்கள் திரண்டதால் பதற்றம்
தூத்துக்குடி அருகே ஏரலில் புதிய டாஸ்மாக் கடை திறக்க முயன்றதைக் கண்டித்து 17 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
தூத்துக்குடி: ஏரல் அருகே புதிய மதுக்கடையை திறக்க முயன்றதால் 17 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் டாஸ்மாக் நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அந்தந்த பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. இதன்படி ஏரல் முக்காணி ரவுண்டானாவில் உள்ள டாஸ்மாக் கடையும் அடைக்கப்பட்டது.

இந்த கடையை ஏரல் அருகே உள்ள கொற்கை குளத்துக்கரை பகுதியில் அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை கொண்டு வந்து இறக்கினர்.
இதுகுறித்து தகவல் சுற்று வட்டார கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆவேசம் அடைந்த அவர்கள் 17 கிராம மக்களுக்கும் தகவல் தெரிவித்தனர். வழவல்லான், தெற்கூர், கொற்கை, கொற்கை மணலூ், அரியபுரம், லட்சுமிபுரம், அதிசயபுரம், அண்ணாநகர், அக்கசாலை உள்ளிட்ட 17 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டனர்.
அவர்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டு எதிர்ப்பு கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு இன்ஸ்பெக்டர்கள் கோகிலா, விஜயகுமார், வெங்கடேசன் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனால் கிராம மக்கள் கேட்காமல் கலெக்டர் அல்லது உயர் அதிகாரிகள் வந்து டாஸ்மாக் கடையை அமைக்க மாட்டோம் என தெரிவிக்க வேண்டும் என்றனர். இதையடுத்து இறக்கப்பட்ட மதுபாட்டில்கள் வாகனத்தில் ஏற்றி அனுப்பப்பட்டது. அதன் பிறகு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் அந்த பகுதி மக்கள் புதிய கடை உள்ள இடத்தில் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications