துபாயில் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு ரத்ததான முகாம் - அன்பில் மகேஷ் எம்எல்ஏ பங்கேற்பு
ஸ்டாலின் பிறந்தநாள் அமீரகத்தில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ பங்கேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு துபாயில் இரத்த தானம் , திருக்குறள் இசை வடிவ சிடி வெளியீடு விழா நடைபெறுகிறது. இதில் திருவெறும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாள் நிழ்ச்சியில் கலந்து கொள்கிறார் மற்றும் அல்அய்ன், துபாயிலும் வரவேற்பு விழாவிலும் அவர் பங்கேற்கிறார்.
மார்ச் 1ஆம் தேதி திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளாகும். தமிழகம் முழுவதும் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் ஸ்டாலினுக்கு பரிசளித்தனர்.
அமீரகத்தில் உள்ள திமுகவினர் ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த விழாவில் திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவும் , மாநில தி மு க இளைஞர் அணி துணைச்செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்கிறார்.
13-04-2017 அல்அய்னில் வரவேற்பு விழா
அல்அய்ன் இந்திய சோசியல் சென்ட்ரல் சார்பாக 13-04-2017 வியாழாக்கிழமை அன்று இந்திய சோசியல் சென்ட்ரல் ஆடிடோரியத்தில், இரவு 7.30 மணியளவில் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நடைபெறும் வரவேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
திருக்குறள் இசை குறுந்தகடு
14-04-2017 அன்று துபாயில் இரத்த தானம் முகாம் மற்றும் திருக்குறள் இசை வடிவ குறுந்தகடு வெளியிடு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ரத்ததான முகாம்
ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 14 -04-2017 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், துபாய் அரசு லத்திபா மருத்துவமனை இரத்ததான நிலையத்தில் நடைபெறும் இரத்த தானம் முகாமை அன்பில் மகேஷ் தலைமையேற்று துவக்கி வைக்கிறார்.
3 நாட்கள் சுற்றுப்பயணம்
ஸ்டாலின் பிறந்தநாளை அமீரகத்தில் 3 நாட்கள் கொண்டாடுகின்றனர். எம்எல்ஏவும் மாநில தி மு க இளைஞர் அணி துணைச்செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதில் பங்கேற்க 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.