தமிழகத்தில் இந்த முறை பெண் வாக்காளர்களே அதிகம்!
சென்னை: தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் பிரவீண் குமார் கூறியுள்ளார்.
தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பணம் பெற்று வாக்களிக்க வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தினார்.
வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த மற்றொரு காணொளியும் இதில் வெளியிடப்பட்டது.

பெண் வாக்காளர்கள் அதிகம்:
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் ஆணையர் பிரவீண் குமார் , "தமிழகத்தில் இந்த தேர்தலில் தான் முதல் முறையாக ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.
வாக்களிக்க தகுதி:
2 கோடியே 75 லட்சத்து 21 ஆயிரத்து 570 பெண் வாக்காளர்களும், 2 கோடியே 75 லட்சத்து 8 ஆயிரத்து 336 ஆண் வாக்காளர்களும் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
வாக்களிக்க தயார்:
அதன்படி, ஆண்களை விட 13,234 பெண் வாக்காளர்கள் தமிழகத்தில் அதிகமாக வாக்களிக்க உள்ளனர்.
மொத்த ஓட்டு 5,5 கோடி:
ஏப்ரல் 24 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ஒட்டு மொத்தமாக 5.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை:
வரும் 12 ஆம் தேதி தேர்தல் ஆணையர்கள் தமிழகம் வருவதாக கூறிய பிரவீண்குமார், அரசியல் கட்சிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் கூறினார்.
மொத்த பறிமுதல்:
இதுவரை தேர்தல் பறக்கும் படையினரால் 34 கோடியே 60 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பிரவீண் குமார் தெரிவித்தார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications