10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுவையில் 4 பேர் முதலிடம்
புதுச்சேரி: புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நான்கு மாணவர்கள் முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் இன்று காலை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில், 498 மதிப்பெண்கள் பெற்று 4 மாணவர்கள் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அம்மாணவர்களின் பெயர் விபரமாவது:
எஸ்.பிரிதா, அலோர்பவம் மேல்நிலை பள்ளி, ஜூடி மெக்கலின் குளோனி மேல்நிலை பள்ளி, வைஷ்ணவி தேவி குளோனி மேல்நிலை பள்ளி, இவர்கள் மூவரும் பிரெஞ்சு மொழிப்பாடம் எடுத்து படித்தவர்கள்.
தமிழ் மொழிப்பாடமாக எடுத்து படித்தவர்களில் திருக்கண்ணுர், சுப்பிரமணிய பாரதி மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த கீர்த்தனா 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதேபோல், 497 மதிப்பெண்கள் பெற்று 18 மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர். மூன்றாம் இடத்தில் 496 மதிப்பெண்களுடன் 13 மாணவர்கள் உள்ளனர்.
பிரெஞ்சு பாடத்தில் 72 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆங்கிலப் பாடத்தில் ஒரே ஒரு மாணவர் மட்டும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இந்தத் தேர்வு முடிவுகளை கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டார்.