ஜல்லிக்கட்டு கலவரம்.. விசாரணைக் குழுவிற்கு 3 மாதம் கால நீடிப்பு
ஜல்லிக்கட்டுக் கலவரத்தை விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் குழுவிற்கு 3 மாதம் கால நீடிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
சென்னை: ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் முடிவில் ஏற்பட்ட வன்முறை குறித்து விசாரித்து வரும் ராஜேஷ்வரன் குழுவிற்கு 3 மாதம் கால நீடிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகச் சென்னை மெரினாவில் தொடர் போராட்டம் மாணவர்களால் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் முடிவில் கலவரம் வெடித்தது.
இந்தக் கலவரத்தில் போலீசாரே குடிசைகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்குத் தீ வைத்தனர். இது பெரும் அதிர்ச்சியைத் தமிழக மக்களிடையே ஏற்படுத்தியது.

ஒரு நபர் விசாரணைக் குழு
இதனையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு ஒன்றை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அமைத்தார். இந்தக் குழு கலவரம் குறித்து தமிழகம் முழுவதும் விசாரணை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

கால அவகாசம் கோரல்
சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் இந்தக் குழு விசாரணை நடத்தியது. ஜல்லிக்கட்டு வன்முறை குறித்த புகார்கள் அதிக அளவில் வருவதால் விசாரித்து முடிக்கக் கூடுதலாக 4 மாதம் தேவைப்படுவதாகக் கூறி கால அவகாசம் தமிழக அரசிடம் கேட்டிருந்தார் ராஜேஷ்வரன்.

கால நீடிப்பு
இதனைத் தொடர்ந்து ராஜேஷ்வரன் குழுவிற்கு 3 மாதம் கால நீடிப்பு வழங்கியுள்ளது தமிழக அரசு. இந்தக் காலக்கெடுவிற்குள் அவர் முழுமையான விசாரணையை நடத்தி முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கால தாமதம்
ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து முழு விசாரணை நடத்தி 3 மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், விசாரித்து முடிக்க மேலும் 3 மாதங்கள் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதால் விசாரணை அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications