ஜல்லிக்கட்டு கலவரம்.. விசாரணைக் குழுவிற்கு 3 மாதம் கால நீடிப்பு
ஜல்லிக்கட்டுக் கலவரத்தை விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் குழுவிற்கு 3 மாதம் கால நீடிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
சென்னை: ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் முடிவில் ஏற்பட்ட வன்முறை குறித்து விசாரித்து வரும் ராஜேஷ்வரன் குழுவிற்கு 3 மாதம் கால நீடிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகச் சென்னை மெரினாவில் தொடர் போராட்டம் மாணவர்களால் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் முடிவில் கலவரம் வெடித்தது.
இந்தக் கலவரத்தில் போலீசாரே குடிசைகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்குத் தீ வைத்தனர். இது பெரும் அதிர்ச்சியைத் தமிழக மக்களிடையே ஏற்படுத்தியது.

ஒரு நபர் விசாரணைக் குழு
இதனையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு ஒன்றை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அமைத்தார். இந்தக் குழு கலவரம் குறித்து தமிழகம் முழுவதும் விசாரணை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

கால அவகாசம் கோரல்
சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் இந்தக் குழு விசாரணை நடத்தியது. ஜல்லிக்கட்டு வன்முறை குறித்த புகார்கள் அதிக அளவில் வருவதால் விசாரித்து முடிக்கக் கூடுதலாக 4 மாதம் தேவைப்படுவதாகக் கூறி கால அவகாசம் தமிழக அரசிடம் கேட்டிருந்தார் ராஜேஷ்வரன்.

கால நீடிப்பு
இதனைத் தொடர்ந்து ராஜேஷ்வரன் குழுவிற்கு 3 மாதம் கால நீடிப்பு வழங்கியுள்ளது தமிழக அரசு. இந்தக் காலக்கெடுவிற்குள் அவர் முழுமையான விசாரணையை நடத்தி முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கால தாமதம்
ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து முழு விசாரணை நடத்தி 3 மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், விசாரித்து முடிக்க மேலும் 3 மாதங்கள் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதால் விசாரணை அறிக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications