இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் சஸ்பெண்ட்
சென்னை: இளம்பெண் பிரியதர்ஷினியை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்ய மறுத்த ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
காதலித்து ஏமாற்றியதோடு வரதட்சணை புகாரில் சிக்கிய வருண்குமாரை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 25). இவர் சென்னை அண்ணா நகரில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்தபோது, அதே மையத்தில் படித்த திருச்சியைச் சேர்ந்த வருண்குமார் (27) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
கடந்த 2011-ம் ஆண்டு இரு வீட்டாரும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கிடையே வருண்குமார் ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன்பின்னர் அவர் பிரியதர்ஷினி குடும்பத்தினரிடம் வரதட்சணையாக லட்சக்கணக்கில் பணமும், 2 கிலோ தங்கமும், சொகுசு காரும் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் திருமணம் நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரியதர்ஷினி சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். அதன்பேரில் வரதட்சணை ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் போலீஸ் அதிகாரியாக வருண்குமார் நியமிக்கப்பட்டார். தன்னை கைது செய்யாமல் இருக்க ஹைகோர்ட் முன்ஜாமீன் மனு கோரினார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். அந்த மனுவும் கடந்த பிப்ரவரி மாதம் தள்ளுபடி ஆனது.
இதையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் தேடி வந்த நிலையில், அவர் சென்னை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து வருண்குமாரை அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
வருண்குமாரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிகோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி சாந்தி தள்ளுபடி செய்தார்.
வருண்குமார் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை பெருநகர 11-வது கோர்ட்டில் ஐ.பி.எஸ். மனுதாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் மனுமீதான விசாரணையை வருகிற 9-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால், தனக்கு முதுகுவலி மற்றும் நெஞ்சுவலி எனக் கூறியதால், வருண்குமார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமாரை தமிழக உள்துறை செயலாளர் சஸ்பெண்ட் செய்துள்ளார். இதற்கான உத்தரவை ராயப்பேட்டையில் மருத்துவமனையில் உள்ள வருண் குமாரிடம் வழங்கப்பட்டது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications