விழாக்கோலம் பூண்ட ஜெ. சமாதி.. பிரிந்த இலைகள் இணைகின்றன.. ஈபிஎஸ், ஓபிஸ் வருகை!
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகி வரும் நிலையில் ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் தனித்தனியே நடைபெற்று வரும் நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டது.
ஓ.பன்னீர் செல்வமும்,எடப்பாடி பழனிச்சாமியும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருகை தருவதால் சமாதிக்குப் புதுப் பொலிவு கிடைத்தது.
அதிமுகவின் ஒபிஎஸ், ஈபிஎஸ் அணிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் தனித்தனியே ஆலோசித்து வருகின்றனர். பிளவுபட்டுள்ள இரு அணிகளும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகி வருகின்றன.

2 முக்கிய அறிவிப்பு
ஓ.பன்னீர் செல்வம் அணியினர் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அது குறித்த முக்கிய அறிவிப்பு இரண்டை வெளியிட்டார்.

என்னென்ன
ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்த விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும், ஜெயலலிதா வாழ்ந்த வீட்டினை நினைவில்லமாக்குவோம் என்றும் அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

ஓபிஎஸ் தீவிர ஆலோசநை
இது குறித்து ஓ.பன்னீர் செல்வம் அணி தனது நிர்வாகிகளுடன் இன்று கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதேபோல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தனது அமைச்சரவை சகாக்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

ஜெ. சமாதி அலங்காரம்
இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இரு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று ஜெயலலிதா நினைவிடத்திற்கு வர வாய்ப்புள்ளதாகவும், அணிகளின் இணைப்பு ஜெயலலிதா நினைவிடத்தில் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.

சமாதி முன்பு இணைப்பு
டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்த ஜெயலலிதா 6ஆம் தேதியன்று எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டார். அது முதல் அதிமுகவினர் முக்கிய அறிவிப்புகளை ஜெயலலிதா சமாதி முன்பாக வெளியிடுகின்றனர். இன்றைய தினம், ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும், இரு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சமாதிக்கு வருகை தர உள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications