”வேடந்தாங்கல்” சரணாலயத்துக்கு புதிய போட்டி – பாச்சல் ஏரிக்குப் பாய்ந்து வரும் பறவைகள்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பாச்சல் ஏரிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பறவைகள் இடம்பெயர்ந்து வந்துள்ளதால் பாச்சல் ஏரி வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போலக் காட்சியளிக்கிறது.
பறவைகளைக் காண சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்களும், குழந்தைகளும் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்று பாச்சல் ஏரி. இந்த ஏரியில் தண்ணீர் அதிக அளவில் இருப்பதால் பறவைகள் புகலிடமாக மாறியுள்ளது.

குவியும் பறவைகள்:
இதனால் நீண்ட மூக்குடன் கூடிய வெள்ளை நிற நாரை, கொக்கு போன்ற பறவைகள் கடந்த சில மாதங்களாக அதிக அளவில் இங்கு வருவதால் பார்ப்போர் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் சுற்றுலாத் தளம் போல் மாறியுள்ளது.

இரை தேடிப் பயணம்:
தற்போது சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பசுமையாகக் காட்சியளிப்பதாலும், கோழிப் பண்ணைக் கழிவுகளில் பறவைகளுக்குத் தேவையான இரை கிடைக்கும் அளவுக்கு உகந்த பகுதியாக இருப்பதாலும் பறவைகள் வரத்து அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றனர் அப் பகுதியினர்.

மகிழ்ச்சியில் மக்கள்:
பகல் நேரங்களில் இரைதேடச் செல்லும் பறவைகள் மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக இங்குள்ள ஏரிக்குத் திரும்புவது அனைவரும் பார்த்து மகிழும் காட்சியாக உள்ளது.

கருவேல மர வீடு:
மாலை வேளைகளில் ஏரியில் உள்ள கருவேல மரங்களில் தங்கியுள்ள பறவைகள் கூட்டம் காண்போரின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

குழந்தைகளுடன் குதூகலம்:
அண்டை மாநிலங்களிலிருந்தும், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கூட்டம், கூட்டமாக இடம்பெயர்ந்து வரும் இந்த பறவைகளைக் காண சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications