கூடங்குளம்: அணுமின்நிலையத்தில் இன்னும் ஒரு வாரத்தில் மின் உற்பத்தி?
கூடங்குளம்: கூடங்குளத்தில் இன்னும் ஒருவாரத்தில் மின்சார உற்பத்தி தொடங்கும் என்று இந்திய அணுசக்தி கழக மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த அணுஉலைகளுக்கு எதிராக கூடங்குளத்தை சுற்றியுள்ள கிராம மக்களும் மீனவர் அமைப்பினரும் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
பல்வேறு தடைகளையும் கடந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் அணுஉலையில் இருந்து மின் உற்பத்தி விரைவில் இம்மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய அணுசக்தி கழக மூத்த அதிகாரி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முதல் அணு உலையானது இந்த ஆண்டு ஜூலை 14-ந் தேதி சோதனை அடிப்படையில் 400 மெகாவாட் மின்சார உற்பத்தியை தயாரிக்கும் நிலையை எட்டி உள்ளது.
முதல் அணு உலையில் இருந்து இன்னும் ஒருவாரத்தில் மின்சார உற்பத்தி தொடங்கும். இதில் இருந்து பெறப்படும் 1000 மெகாவாட் மின்சாரம் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி ஆகிய 4 தென்மாநிலங்களின் மின்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமையும்.
2வது அணு உலை
கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2-வது அணு உலையானது அடுத்த ஆண்டு (2014) மத்தியில் முழு அளவில் தனது மின்சார உற்பத்தியை செயல்படத்தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். கூடங்குளத்தில் 2 அணு உலைகளில் இருந்தும் பெறப்படும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தென் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். இதன் மூலம் அம்மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மின்சார பற்றாக்குறை ஓரளவுக்கு சீரடையும் என எதிர்பார்க்கிறோம்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் இருந்து கர்நாடகத்துக்கு 442 மெகாவாட்டும், கேரளாவுக்கு 266 மெகாவாட்டும், புதுச்சேரிக்கு 67 மெகாவாட்டும் வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications