கூடங்குளம்: அணுமின்நிலையத்தில் இன்னும் ஒரு வாரத்தில் மின் உற்பத்தி?
கூடங்குளம்: கூடங்குளத்தில் இன்னும் ஒருவாரத்தில் மின்சார உற்பத்தி தொடங்கும் என்று இந்திய அணுசக்தி கழக மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த அணுஉலைகளுக்கு எதிராக கூடங்குளத்தை சுற்றியுள்ள கிராம மக்களும் மீனவர் அமைப்பினரும் கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
பல்வேறு தடைகளையும் கடந்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் அணுஉலையில் இருந்து மின் உற்பத்தி விரைவில் இம்மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய அணுசக்தி கழக மூத்த அதிகாரி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முதல் அணு உலையானது இந்த ஆண்டு ஜூலை 14-ந் தேதி சோதனை அடிப்படையில் 400 மெகாவாட் மின்சார உற்பத்தியை தயாரிக்கும் நிலையை எட்டி உள்ளது.
முதல் அணு உலையில் இருந்து இன்னும் ஒருவாரத்தில் மின்சார உற்பத்தி தொடங்கும். இதில் இருந்து பெறப்படும் 1000 மெகாவாட் மின்சாரம் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி ஆகிய 4 தென்மாநிலங்களின் மின்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமையும்.
2வது அணு உலை
கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2-வது அணு உலையானது அடுத்த ஆண்டு (2014) மத்தியில் முழு அளவில் தனது மின்சார உற்பத்தியை செயல்படத்தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். கூடங்குளத்தில் 2 அணு உலைகளில் இருந்தும் பெறப்படும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தென் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். இதன் மூலம் அம்மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மின்சார பற்றாக்குறை ஓரளவுக்கு சீரடையும் என எதிர்பார்க்கிறோம்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் இருந்து கர்நாடகத்துக்கு 442 மெகாவாட்டும், கேரளாவுக்கு 266 மெகாவாட்டும், புதுச்சேரிக்கு 67 மெகாவாட்டும் வழங்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications