தென் மாவட்டங்களுக்கு தாம்பரம் வழியா கார்ல போக வேண்டாமே... போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்!
சென்னை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சொந்த ஊருக்கு பயணம் செய்பவர்கள் தாம்பரம் வழியாக செல்ல வேண்டாம் எனவும், 3 வேறு வழித்தடங்களை பரிந்துரைத்து அதைப் பயன்படுத்துமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
கார்களில் செல்பவர்களில் பெரும்பாலானோர் தாம்பரம்-பெருங்களத்தூர் வழியாக ஜி.எஸ்.டி. சாலையிலேயே செல்வார்கள். இந்த சாலை வழியாகத்தான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு மற்றும் ஆம்னி பஸ்கள் ஆகியவையும் செல்லும்.

அதிலும் தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் 2 நாட்களுக்கு முன்னதாகவே தங்களது சொந்த கார்களில் ஊருக்கு செல்ல பலர் விரும்புகிறார்கள்.
போக்குவரத்து நெரிசல்:
இது போன்ற நேரங்களில் வழக்கத்தை விட கூடுதல் பஸ்களும் இயக்கப்படும். இதனால் ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
கடுமையான சிரமம்:
அந்த சாலையில் அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், கார்கள் என அனைத்தும் அணி வகுப்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் கடுமையான சிரமத்துக்குள்ளாவார்கள்.
தாம்பரம் வழியாக செல்ல வேண்டாம்:
இதனை கருத்தில் கொண்டு தென் மாவட்டங்களுக்கு கார் மற்றும் தனியார் வாகனங்களில் பயணம் செய்பவர்கள் தாம்பரம் வழியாக ஜி.எஸ்.டி. சாலையில் செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வாகனங்களில் பயணம்:
இது தொடர்பாக பொதுமக்களுக்கு அவர்கள் ஏற்கனவே இருக்கும் மாற்று வழிகளையும் அடையாளம் காட்டியுள்ளனர். போக்குவரத்து மாற்றம் பற்றி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வாகனங்களில் பயணிப்பார்கள்.
திருச்சி நெடுஞ்சாலையை அடையலாம்:
இதனால் ஜி.எஸ்.டி சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக வாய்ப்பிருக்கிறது. எனவே இன்று முதல் தனியார் வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்கள் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து கீழ்கண்ட சாலைகள் வழியாகவும் செங்கல்பட்டு திருச்சி நெடுஞ்சாலையை சென்றடையலாம். ராஜீவ் காந்தி சாலை வழியாக துரைப்பாக்கம், கேளம்பாக்கம், திருக்கழுக்குன்றம் பைபாஸ் வழியாக செங்கல்பட்டு திருச்சி நெடுஞ்சாலையை சென்றடையலாம்.
வெவ்வேறு வழிகள்:
கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று அக்கரை, முட்டுக்காடு, கோவளம், மகாபலிபுரம் பைபாஸ், கருங்குழி, திருக்கழுக்குன்றம் பைபாஸ் வழியாகவும் செங்கல்பட்டு திருச்சி நெடுஞ்சாலையை சென்றடையலாம்.
மூன்றாவதாக இந்த வழி:
பூந்தமல்லி சாலை வழியாக மதுரவாயல் சந்திப்பு, வேலப்பன் சாவடி, சவிதா பல் மருத்துவக்கல்லூரி, பூந்தமல்லி டெலிபோன் எக்சேன்ஞ் வழியாக நசரத் பேட்டை சென்று பூந்தமல்லி பைபாஸ் சாலையிலிருந்து புதிதாக போடப்பட்டுள்ள 400 அடி வெளிப்புறச்சாலை வழியாக நேராக வண்டலூர் அருகில் ஜி.எஸ்.டி சாலையை அடைந்து சென்னை-திருச்சி நெடுஞ்சாலையை சென்றடையலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications