சோதனைக்கு அனுப்பிய பாலில் ரசாயனம் கலப்பு இல்லை...புனே லேப் அறிக்கை!
சோதனைக்காக தமிழகத்தில் இருந்து அனுப்பிய பாலில் ரசாயனம் இல்லை என்று புனே பரிசோதனை மையம் அறிக்கையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : தமிழகத்தில் இருந்து பரிசோதனைக்காக புனேவில் உள்ள மத்திய அரசின் உணவு பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பிய பாலில் ரசாயனம் கலப்பு இல்லை என்று அந்த ஆய்வக அறிக்கையில் தெரியவந்துள்ளது.
தனியார் பாலில் 100 சதவீதம் ரசாயன கலப்பு செய்யப்படுவதாக தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்ததால் சர்ச்சை எழுந்தது. தமிழக அரசின் ஆய்வகத்தில் தானே முன் நின்று நடத்திய ஆய்வில் இது தெரிய வந்ததாகவும் அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த 31ம் தேதி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் புனேவில் உள்ள ஆய்வகத்தில் சில மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

ரசாயனம் இல்லை
இந்த ஆய்வின் முடிவுகள் நேற்று தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் உள்ள தகவல்களை புனே ஆய்வகம் மறுத்த நிலையில், அறிக்கை இன்னும் கைக்கு கிடைக்கவில்லை என்று தமிழக அரசும் தெரிவித்துவிட்டது. தமிழக பால்வளத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் இது குறித்து தெரிவித்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தனியார் நிறுவன பாலில் ரசாயன கலப்படம் இல்லை என்று முடிவுகள் வந்துள்ளதாக கூறியுள்ளார்.

கலப்படம் உண்டு
பாலில் ரசாயனம் இல்லை என்று முடிவுகள் வந்தாலும், அதில் கலப்படம் செய்யப்படுகிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளதாக தெரிகிறது. கடந்த 2016ம் ஆண்டு ஈரோட்டில் தனியார் நிறுவன பாலில் கொழுப்பின் அளவு குறித்து ஆய்வு செய்த போது அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

226 வழக்குகள்
இதனிடையே சட்டசபையில் நேற்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பத்திரிக்கையாளர்களிடம் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக கூறியதாக தெரிவித்தார். மேலும் கடந்த 6 ஆண்டுகளில் பாலில் கலப்படம் செய்த 226 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

புனே அறிக்கை
இந்நிலையில்தான் புனே ஆய்வக அறிக்கை வந்துள்ளது. இதில் பாலில் ரசாயன கலப்படம் இல்லை என்பது தெளிவாகி உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications