சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை!
சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் ஆடி மாதத்திற்கு பிறகும் சென்னை உட்பட பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வந்தது.

கத்திரி வெயிலை போன்று வெயில் சுட்டெரித்ததோடு அனல் காற்றும் வீசியதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். ஆனாலும் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து பெரும்பாலான மாவட்டங்களை சில்லாக்கியது.
இந்நிலையில் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதானல் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
இதேபோல் திருச்சி மாவட்டம் முசிறி, மதுரை திருப்பரங்குன்றம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. அடித்து வெளுத்த வெயிலுக்கு இதமாக திடீரென மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.












Click it and Unblock the Notifications