திருச்சி கட்டட விபத்தில் காயமடைந்த குழந்தைக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி.. முதல்வர் அறிவிப்பு
திருச்சி கட்டட விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைக்கு ரூ. 5 லட்சத்தை வைப்பு நிதியாக வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: திருச்சியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் தாய், தந்தையை இழந்த
ஒன்றரை வயது குழந்தைக்கு ரூ. 5 லட்சம் நிதியை வைப்பு நிதியாக வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
மலைக்கோட்டை அருகே உள்ள குளத்தெருவில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த கட்டடம் இன்று காலை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்தன.
அப்போது இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 4 பேர் பலியாகிவிட்டனர். அவர்கள் கார்த்திக் , ஹரீஷ் (தந்தை, மகன்), தம்பதியான பழனி- ராசாத்தி தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில் இவர்களது ஒன்றரை வயது குழந்தை பரமேஸ்வரி சிறு காயங்களுடன் மீட்கப்பட்டது.
இந்த குழந்தைக்கு ரூ. 5 லட்சம் வைப்பு நிதியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் வைப்பு நிதியின் மூலம் குழந்தையை பராமரிக்க ரூ.4,062 மாதந்தோறும் வட்டி கிடைக்கும்.